பங்கு சந்தை ஊழல்: சித்ரா ராமகிருஷ்ணா, கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்
டெல்லி: நாட்டை அதிர வைத்த தேசிய பங்கு சந்தை ஊழலில் முக்கிய குற்றவாளிகளான சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தேசிய பங்கு சந்தை தொடர்பான தகவல்களை பெரும் பணம் பெற்றுக் கொண்டு தனிநபர்களிடம் தரகர்களிடம் பகிர்ந்தது, தேசிய பங்கு சந்தை சர்வர்களை பிற நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதித்தது என ஏராளமான ஊழ முறைகேடுகளில் அதன் முன்னாள் செயல் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன், அவரது கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இருவர் மீதும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி 2015-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடத்தி வருகிறது. இருவர் மீதும் இத்தனை ஆண்டுகளாகியும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில்தான் ஆனந்த் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தேசிய பங்கு சந்தை தொடர்பான அத்தனை விவகாரங்களையும் மர்ம யோகி அல்லது சாமியார் ஒருவருக்கு இ மெயில் மூலம் ஒன்றுவிடாமல் தாம் பகிர்ந்ததாக சிபிஐ விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா கூறியிருந்தார். அப்போது, சித்ரா ராமகிருஷ்ணனுக்கு இமயமலை சாமியார் அனுப்பிய இ மெயில்களை சுட்டிக்காட்டி அதாவது நீங்க இளமையாக இருக்கீங்க... செசல்ஸ் தீவுக்கு போய் கடல் குளியல் போடலாம் என்ற விவகாரங்களை வைத்து துருவி துருவி சிபிஐ கேள்வி கேட்டும் சித்ரா வாயே திறக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் இன்னமும் அந்த மர்ம சாமியார் என்பதுதான் தெரியவில்லை.
மேலும் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மீது தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கும் பாய்ந்தது. இந்த நிலையில்தான் சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications