தனி அறை.. விருந்துக்கு பின் மீட்டிங்.. அமித் ஷா உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஓபிஎஸ்.. ஏன்?
நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கட்சியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வருகிறது.
Recommended Video
டெல்லி: நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கொடுத்த விருந்திற்கு பின் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கட்சியுடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வருகிறது.
நாளை லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், நேற்று மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். நேற்று மாலை தொடங்கிய இந்த சந்திப்பு இரவு 10 மணி வரை நடைபெற்றது.
டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடந்தது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்கினார்.

தமிழகம் தலைவர்கள்
இந்த ஆலோசனைக்கு பின் பாஜக கூட்டணி தலைவர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது. இதில் தமிழக அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளம்பி சென்றனர்
இந்த விருந்து முடிந்த பின் பாஜக கட்சியை சேராத தலைவர்கள் உடனடியாக கிளம்பி சென்றார்கள். தமிழக தலைவர்களும் இரவோடு இரவாக சென்னை கிளம்பி சென்றனர். அதன்பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் சென்று தங்கினார். ஆனால் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் டெல்லியிலே தங்கிவிட்டார்.

அதே ஹோட்டல்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழா நடந்த அசோகா ஹோட்டலிலேயே தங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலில் நேற்று இரவு முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்று தனியாக நடந்து இருக்கிறது. இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில்தான் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார் என்று கூறுகிறார்கள்.

என்ன பேசினார்கள்
இதில் அமித் ஷா பாஜகவின் அடுத்த கட்ட திட்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். தேர்தலில் பெரும்பான்மை பெறவில்லை என்றால் என்ன செய்வது என்பது குறித்து இவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த மிக முக்கியமான பேச்சுவார்த்தையில்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசி இருக்கிறார்.

ரகசிய பேச்சுவார்த்தை
அதேபோல் இந்த சந்திப்பில், தமிழக சட்டசபை இடைத்தேர்தல் குறித்தும், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். சுமார் 2 மணி நேரம் இதுகுறித்து பேசி இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் இதனால்தான் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார் என்கிறார்கள். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் ஹோட்டலில் ஆலோசனையில் கலந்து கொண்டது எடப்பாடி பழனிச்சாமி தரப்பை கொஞ்சம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு!











Click it and Unblock the Notifications