பயணிகள் கவனத்திற்கு.. ரயிலின் ஸ்லீப்பர், ஏசி பெட்டிகளில் புது விதி அமல்.. இது தெரியாமல் போகாதீங்க
டெல்லி: ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த சில புதிய விதிகளை ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் மக்களின் பயண தேவைகளை பூர்த்தி செய்வதில் ரயில்வேக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.. பாதுகாப்பான மற்றும் பயணம்.. மலிவான கட்டணம்.. ஆகியவை காரணமாக ஏழை எளிய மக்கள் முதல் நடுத்தரமக்கள் ஏன் வசதி படைத்தவர்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள். குறிப்பாக தொலை தூரங்களுக்கு செல்வது என்றால் முதலில் ரயிலில் டிக்கெட் இருக்கிறதா என்று தான் பெரும்பாலானோர் பார்ப்பதுண்டு.

அதுவும் பண்டிகை காலங்களில் எல்லாம் சொல்லவே வேண்டாம். டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ரயில்களில் டிக்கெட் காலியாகிவிடும். ரயிலில் டிக்கெட் இல்லை என்றால் மட்டுமே பலரும் பேருந்தை பற்றி யோசிப்பார்கள். சரியான நேரத்திற்கு சென்று விடலாம் என்பதோடு... பேருந்துகளை ஒப்பிடும் போது களைப்பு இன்றி பயணம் செய்ய முடியும்.
அதோடு, குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் வசதியான பயணமாக ரயில் இருப்பதால் ரயில் பயணத்தை பலரும் விரும்புவார்கள். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வே அவ்வப்போது ரயில்வே புதிய விதிகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ரயில்வே ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் லக்கேஜ் கொண்டு செல்வதில் புதிய விதிகளை வெளியிட்டு இருக்கிறது. அது பற்றிய விவரத்தை பார்ப்போம்.
லக்கேஜ்களுக்கான விதிகள்: * ஏசி கோச்களில் ஒரு பயணி அதிகபட்சமாக 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டு வரலாம்.
* ஸ்லீப்பர் கோச்களில் 40 கிலோ வரையிலான லக்கேஜ்களுக்கு கட்டணம் கிடையாது.
* இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் 35 கிலோ எடை வரையிலான உடைமைகளை பயணிகள் எடுத்து வரலாம்.
* அதேபோல் கூடுதல் கட்டணம் செலுத்தி 150 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டு வரலாம்.
அதவாது ஸ்லீப்பர் கோச்களில் 80 கிலோ வரையிலான லக்கேஜ்களையும் செக்கண்ட் சீட் வகுப்பில் 70 கிலோ வரையிலான லக்கேஜ்களை கொண்டுவரலாம்.
மேலும் சில விதிகள்: * சக பயணிகளுடன் பேசும் போதோ.. அல்லது போனில் பேசும் போதோ அதிக சத்தத்துடன் பேசக்கூடாது.
* செல்போன்கள் ஹெட்போன்கள் இன்றி அதிக சத்தத்துடன் பாடல்களை கேக்கக் கூடாது.
* இரவு நேர விளக்குகளை தவிர வேறு எந்த விளக்குகளையும் இரவு 10 மணிக்கு மேல் எரிய விடக்கூடாது.
* இரவு 10 மணிக்கு மேல் வந்து TTE -க்கள் டிக்கெட்டுகள் செக் செய்யக்கூடாது
* இரவு விளக்குகளை தவிர அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட வேண்டும்.
* மிடில் பெர்த் பயணிகள் எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் அதை பயன்படுத்தலாம்... லோயர் பெர்த் பயணிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது
* இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன் டைனிங் சேவைகள் உணவுகளை விநியோகிக்கக் கூடாது.
* அதேவேளையில் e-catering சேவை மூலம் முன்கூட்டியே உணவை ஆர்டர் செய்து இரவு நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
* ரயில்களில் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்றவைகளில் ஈடுபடக்கூடது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட இந்த விதிகள் பயணிகளுக்கு மட்டும் இன்றி ரயில்வே ஊழியர்களுக்கும் பொருந்தும்.












Click it and Unblock the Notifications