ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. ஆக. 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதை மீட்க மத்திய அரசு தொடர்ச்சியாக திட்டங்களை வகுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதனால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முதல் முக்கியமான திட்டங்களை அறிவித்தார். அதன்படி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பதாக அவர் கூறினார். இதை தொடர்ந்து இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பேட்டி அளித்தார்
இந்த நிலையில் இன்று அளித்த பேட்டியில், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதற்கான ஆயத்த பணிகள் முடிந்துள்ளது . ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மூலம் 67 கோடி பேர் பயனடைவர். மக்களின் உணவு தேவை இதனால் எளிதாக பூர்த்தி செய்யப்படும் . அனைத்து மாநில மக்களுக்கும் எளிதாக ரேஷன் கிடைக்கும். யாருக்கும் ரேஷன் இல்லாத நிலைமை ஏற்படாது.

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்
இதன் மூலம் ரேஷன் அட்டைகளை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பயன்படுத்தலாம். இதனால் அதிகம் பயன்பெற போவது பிற மாநில தொழிலாளர்கள்தான். பொருளாதார சரிவுக்கு இடையே அவர்களின் உணவு தேவை இதனால் பூர்த்தி ஆகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 மாதங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் அல்லது அவர்களின் தேவைக்கு ஏற்ப கோதுமை வழங்கப்படும்.

உணவு தேவை பூர்த்தியாகும்
இந்தியா முழுக்க பிற மாநிலங்களில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 10 கோடிக்கும் அதிகமான குடும்பம் இப்படி உள்ளது. இதில் 8 கோடி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த உணவு தானியங்கள் சென்றடையும். இதற்கான திட்ட பணிகளை வகுத்து இருக்கிறோம். மாநில அரசுகளின் உதவியுடன் இந்த திட்டங்களை செயல்படுத்துவோம். தகுதியான பிறமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள். இதற்கான சர்வே தொடங்க உள்ளது. இதற்காக ரூ.3500 கோடியை ஒதுக்கி உள்ளோம்.

உணவு கிடைக்கும்
இதன் மூலம் நாடு முழுக்க ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை மாற்ற மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது. நாடு முழுக்க எல்லோருக்கும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டுகளை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.அதன்படி இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருக்கும் நபர்களும் வேறு எந்த மாநிலத்திலும் ரேஷன் வாங்க முடியும். இந்த திட்டத்தை மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் என்று பெயர் வைத்து அழைத்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications