Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஆபரேஷன் பிரம்மா'”.. மியான்மர் மக்களுக்காக கரம் கொடுத்த இந்தியா.. முதல் நாடாக களத்தில் இறங்கியது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 'ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் மியான்மருக்காக கைகொடுத்துள்ளது இந்தியா. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளிலேயே முதல் நாடாக, மியான்மருக்கு நிவாரண பொருட்களை கொண்டு சேர்த்துள்ளது இந்தியா.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் மியான்மர் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது.

Operation Brahma India Becomes First to Deploy Rescue Team in Myanmar

மியான்மர் நிலநடுக்கம்

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.

அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மர் நாட்டின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. அங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் உயருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

1000க்கும் அதிகமானோர் பலி

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், வியட்நாம் சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. தாய்லாந்து நாட்டிலும் நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர்.

Operation Brahma India Becomes First to Deploy Rescue Team in Myanmar

ஆபரேஷன் பிரம்மா

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ள நிலையில் நமது இந்திய அரசு 'ஆபரேஷன் பிரம்மா' என்ற பெயரில் முதல் கட்டமாக மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உறைவிடங்கள் இழந்த மக்கள் மீண்டெழ வசதியாக கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது இந்தியா.

உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படையின் IAF C 130J விமானத்தில் அனுப்பப்பட்ட முதல் கட்ட நிவாரணப் பொருள்கள் மியான்மர் சென்றடைந்தன. அங்கு மியான்மர் அதிகாரிகள் மற்றும் மியான்மர் நாட்டிற்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்.

களத்தில் இறங்கிய முதல் நாடு இந்தியா

மியான்மருக்கு உலக நாடுகளிலேயே முதல் நாடாக உதவிக்கரம் நீட்டி இருப்பது இந்தியா தான். இந்தியாவில் இருந்து சென்றுள்ள பேரிடர் மீட்புக் குழு நாளை அதிகாலை மண்டலே நகருக்குச் செல்லும், மேலும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மண்டலேவை அடையும் முதல் மீட்புக் குழு இந்தியாவின் NDRF மீட்புக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உறுதி

இதற்கிடையே மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆங் ஹ்ளெய்ங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசினார். இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+