பாஜகவை வீழ்த்த ப.சிதம்பரம் சொன்ன "மாஸ்டர் பிளான்!" பாட்னா சங்கமத்தில் ஆரம்பிக்கிறதா திருப்புமுனை?
டெல்லி: லோக்சபா தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 475 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் பார்முலா ஏற்கப்படுமா என்பது பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூன் 12-ல் நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் மகா சங்கமம் மாநாட்டில் தெரியவரும்.
2014, 2019 லோக்சபா தேர்தல்களில் பாஜக அதிரடியாக தொடர்ந்து வெற்றி வாகை சூடியது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியாத நிலைக்கு ஒரு மாநில கட்சி பெறக் கூடிய இடங்கள் அளவுக்குதான் வெற்றி பெற முடிந்தது. இதனால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜக, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பது பல மாநில தலைவர்களின் கருத்தாக இருந்தது.

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸை எதிர்த்துதான் முதல்வர் மமதா பானர்ஜி அரசியல் செய்கிறார். அதனால் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளின் கூட்டணியை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இதற்கான சந்திப்புகளையும் இடைவிடாமல் மேற்கொண்டார். அதேபோல சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் காங்கிரஸுடனான கூட்டணி அனுபவத்தால், ஆளைவிட்டால் போதும் என்கிற நிலைமையாக இதர மாநில கட்சிகளுடன் கரம் கோர்க்க தயார் என்றார். ஶ்ரீநகரில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடா பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கூட அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. தெலுங்கானாவிலும் காங்கிரஸுக்கு எதிராக கேசிஆர் அரசியல் செய்ய வேண்டி இருப்பதால் அவரும் காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சித்தார். இப்படி எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு நிற்பதை பாஜகவும் மவுனமாக வேடிக்கை பார்த்தது.
ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி காங்கிரஸ்- ஆர்ஜேடியுடன் கரம் கோர்த்து பீகாரி ஆட்சி அமைத்திருக்கும் நித்ஷ்குமார், காங்கிரஸை விட்டுவிடாமல் அதனையும் உள்ளடக்கிய மெகா கூட்டணிக்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டார். தொடக்கத்தில் காங்கிரஸும் கூட நிதிஷ்குமாரின் இந்த முயற்சி தேறாது என ஒதுங்கித்தான் இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் நிதிஷின் முயற்சிகளுக்கு காங்கிரஸ் ஓகே சொன்னது. இதனால் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேகம் அதிகரித்தது. காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களை நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் இருவரும் மாநிலம் மாநிலமாக சென்று சந்தித்து பேசி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாகத்தான் பாட்னாவில் ஜூன் 12-ல் காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் மாநாடு நடைபெற உள்ளது.

பாட்னா மாநாட்டை நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பதால் அரவிந்த் கெஜ்ரிவால், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் ஓகே சொல்லிவிட்டனர். இதர எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. இம்மாநாட்டில் லோக்சபா தேர்தலை எந்த வகையில் ஒருங்கிணைந்து எதிர்கொள்வது என்பதுதான் வியூகமாக இருக்கப் போகிறது என கூறப்படுகிறது.
அண்மையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பாஜக போட்டியிடக் கூடிய 450 தொகுதிகளில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தலாம். இது குறித்து பாட்னா மாநாட்டில் பேசி முடிவெடுக்கலாம் என கூறியிருந்தார். தற்போது நிதிஷ்குமாரும் இது தொடர்பாக ஆலோசனைகளை நடத்தி வருகிறாராம். நாடு முழுவதும் மொத்தம் 475 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர்களை களமிறக்கினால் வெல்வது எளிது என்பதுதான் புதிய வியூகமாம். இந்த வியூகம் விஸ்வரூபம் எடுக்குமா? இல்லையா? என்பது பாட்னா சங்கமத்தில் தெரியவரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications