Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒற்றை வானமும் ஒரு பறவையும்! சுவிட்சர்லாந்தில் வெளியான தமிழ் புத்தகம்.. எங்கும் தமிழ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சுவிட்சர்லாந்து, பேர்ன் மாகாணத்தில் அமைந்துள்ள தமிழர்களறி மண்டபத்தில் ஒற்றை வானமும் ஒரு பறவையும் என்ற கவிதை நூல் நேற்று வெளியிடப்பட்டது.

சுவிட்சர்லாந்து நாட்டில் பல நூல்களின் வெளியீட்டு நிகழ்வுகளைச் செய்து வந்த தமிழர்களறி ஆவணக் காப்பகம் 15. 10. 2023 இல் பதிப்பகமாகவும் உருவெடுத்துள்ளது. மேலும் ஈழத்துப் படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமாரின் ஒற்றை வானமும் ஒரு பறவையும் கவிதை நூலைத் தனது முதற்பதிப்பாக நேற்று வெளியிட்டுள்ளது.

Otrai Vaanamum Oru Paravaiyum book released in Switzerland

தாயகத்து இசைக் கலைஞர்களின் மங்கல இசையுடனும், மங்கள விளக்கேற்றலுடனும் தொடங்கிய நிகழ்வில் சிவஞானசித்தர்பீட நிறுவனர்களில் ஒருவரான திருநிறை. நடராசா சிவயோகநாதன், சைவநெறிக் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவருசி. தருமலிங்கம் சசிக்குமார், பேர்ன் வள்ளுவன் பள்ளி ஆசிரியர்களான திருமதி. நந்தினி முருகவேள், திரு. பொன்னம்பலம் முருகவேள், தமிழாசிரியை திருமதி. பிரேமினி அற்புதராசா, சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்மஸ், ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் பெண் அருட்சுனையர் தனவதி மதுகரன் ஆகியோர் விளக்கேற்றினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து, வரவேற்புரையும் வெளியீட்டுரையும் தமிழர்களறி தில்லையம்பலம் சிவகீர்த்தியால் நிகழ்த்தப்பட்டன. சிவருசி. தர்மலிங்கம் சசிகுமாரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, கவிதை நூலுக்கான மதிப்பீட்டுரைகள் இடம்பெற்றன. சுக் மாநிலத் தமிழ்ப்பாடசாலை ஆசிரியை விக்னேஸ்வரி சிறீகாந்தரூபனும், போராளி செம்பருத்தியும் மதிப்பீட்டுரைகளை ஆற்றினர்.

மதிப்பீட்டுரைகளைத் தொடர்ந்து, நூல்வெளியீடு இடம்பெற்றது. நூலாசிரியர் ஆதிலட்சுமி சிவகுமார் நூலை வெளியிட்டு வைக்க சைவசித்தாந்த சித்தர்பீடம் சார்பாக சிவயோகன் நூலின் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் திரு. வலந்தீஸ் கொலம்பஸ் சிறப்புரை நிகழ்த்தினார். போர்க்காலப் படைப்புகளின் சிறப்புகளையும், படைப்புகள் கொண்டிருக்க வேண்டிய மனிதத்தின் தேவைகளையும் அவர் தன்னுரையில் வெளிப்படுத்தினார்.

Otrai Vaanamum Oru Paravaiyum book released in Switzerland

தொடர்ந்து நூலாசிரியர் உரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் ஆற்றினார்.
விடுமுறை நாளிலும் இலக்கிய ஆர்வலர்களும் நண்பர்களும் திரளாகக் கலந்துகொண்டு, அரங்கை நிறைத்து வெளியீட்டு விழாவைச் சிறப்பித்தனர்.

கவிஞையும், தமிழ்ப்பாடசாலை ஆசிரியையுமான சிவதர்சினி இராகவன் நிகழ்வினை தனது அழகுதமிழில் சிறப்பாகத் தொகுத்தளித்தார். விழாவின் நிறைவாக, வருகை தந்த அனைவருக்கும் தமிழர்களறி நண்பகல் உணவளித்து, தமிழினத்தின் விருந்தோம்பற் பண்பினை வலுப்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+