மன்மோகன் சிங் மீது எவ்வளவு நம்பிக்கை ப சிதம்பரத்துக்கு.. அவர் சொன்ன பிறந்தநாள் வாழ்த்தை பாருங்க!
Recommended Video
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது 89வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார சரிவுக்கு மன்மோகன் சிங் கூறும் தீர்வை மத்திய அரசு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். பொருளாதார நிபுணரான இவர், நாட்டில் புதிய பொருளாதார கொள்கையை அமல்படுத்தினார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர், திட்டக்குழு துணைத்தலைவர், தலைமை பொருளாதார ஆலோசகர், மத்திய நிதியமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த மன்மோகன் சிங் நாட்டின் பிரதமராகவும் இருந்து நாட்டை வழிநடத்தினார்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் மன்மோகன் சிங்கிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் "நம்முடைய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அவருக்கு அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ''எனக்காக எனது குடும்பத்தினர் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாடும் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேறுவதற்கான வழியை யாராவது காட்ட முடியும் என்றால்.. அது மன்மோகன் சிங்கால் தான் முடியும். மன்மோகன் சிங் கூறும் தீர்வை மத்திய அரசு கேட்க வேண்டும்.'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications