106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப. சிதம்பரம் பங்கேற்பு
Recommended Video
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 106 நாட்கள் டெல்லி திகார் சிறைவாசம் முடிவுக்கு வந்த நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப. சிதம்பரத்துக்கு, சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆனால் அதற்கு முன்னரே அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்தனர். இவ்வழக்கில் சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைப்பதில் பெரும் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து நேற்று இரவு டெல்லி திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறை வளாகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிதம்பரத்துக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சிதம்பரம் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ப. சிதம்பரம் பங்கேற்க உள்ளார். பொருளாதார நிலையில் பெரும் சரிவு, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என நாடாளுமன்றத்தில் பல விவகாரங்களில் அனல்பறந்து கொண்டிருக்கும் நிலையில் சிதம்பரத்தின் பேச்சுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications