தீவிரவாதிகளின் தடையமே கிடைக்கல.. ஹமாஸ் பயன்படுத்திய டெக்னிக்! விசாரணையில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு புதிய தொழில்நுட்ப முறைகளை பின்பற்றி இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. எனவேதான் அவர்களை பின்தொடர முடியவில்லை என சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஹமாஸ் அமைப்பு பயன்படுத்தியது. இதை வைத்துதான் இஸ்ரேலை தாக்கியது. இப்போது இதே யுக்தி ஜம்மு காஷ்மீரிலும் பயன்படுத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் என்கிரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் செயலிகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். இந்த செயலியை பயன்படுத்த மொபைல் இன்டெர்நெட் அவசியமில்லை. ஏன் டவர் கூட வேண்டியதில்லை. சிம் கார்டே இல்லை என்றாலும் கூட இதை பயன்படுத்த முடியும்.
ப்ளூடூத்
வைஃபை ஹாட்ஸ்பாட்
மெஷ் நெட்வொர்க்
இந்த மூன்று முறைகளில்தான் தீவிரவாதிகள் தங்களுக்குள் தகவலை பரிமாறியிருப்பார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு Bridgefy எனும் செயலியை எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ளூடூத் வழியாக தகவலை பரிமாற்ற உதவும் செயலியாகும். இந்த தகவல் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும். அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் ஒரு பெட்டியில் வைத்து பூட்டப்படுகிறது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள். பெட்டிக்கான சாவி ஒன்று உங்களிடம் இருக்கும். மற்றொன்று பெட்டியை பெறுபவரிடம் இருக்கும். இடையே பெட்டி திருடப்பட்டாலும் உள்ளே இருக்கும் தகவலை படிக்க முடியாது.
மற்றொரு செயலி Briar. இதுவும் ப்ளூடூத் மற்றும் வைஃபை வழியாக இயங்குகிறது. 50-100 மீட்டருக்கு இடைப்பட்ட தூரத்தில் இந்த செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துக்கொள்ள முடியும். இதற்கு இன்டெர்நெட், ரேடியோ உள்ளிட்டவை தேவையில்லை என்பதால் தகவல்களை இடைமறிக்க முடியாது. ஏன், தகவல் பரிமாற்றம் நடப்பது கூட நமக்கு தெரியாது. FireChat என இன்னொரு செயலி இருக்கிறது. இது மெஷ் நெட்வொர்க் மூலம் குரூப் சாட் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையெல்லாம் ராணுவம் மட்டுமே பயன்படுத்தும். வாசகர்கள் முயன்று பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவற்றை பயன்படுத்திதான் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க நமக்கு கூடுதல் நேரம் எடுக்கிறது.
இந்த தாக்குதல் நமக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய பயங்கரவாத உத்திகள் உருவாகின்றதோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலை முன்கூட்டியே கணிப்பது சிரமமாகும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications