“பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது..” பஹல்காம் தாக்குதல் தினத்தை குறிப்பிட்டு மோடி உறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடந்த பஹல்காம் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகும் நிலையில், அதை நினைவுகூறிய பிரதமர் மோடி, "பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்களை இந்தியா ஒருபோதும் மறக்காது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

narendra mdoi Jammu Kashmir india

மேலும், எந்த வடிவத்திலான பயங்கரவாதத்திற்கும் இந்தியா ஒருபோதும் தலைவணங்காது என்று பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் கொடூரமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், நாடாக நாம் அனைவரும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் நாட்டை உலுக்கியது. அதன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் இன்று (ஏப்ரல் 22, 2026) கடைபிடிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+