போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் செயல்பட்டது.. இந்திய ராணுவம் குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன." என முப்படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முப்படை அதிகாரிகள் பேசுகையில், "பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்திய ராணுவம் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்தது. ஆனால், அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்.

Pak Aimed to Trigger War But All Attacks Failed Indian Army Officials

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய பயங்கரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும். இதன்மூலம், பயங்கரவாத செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதில் அங்கிருந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய தேசம் பயங்கரவாதச் செயல்களை சகித்துக்கொள்ளாது என்பதையே மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்கிறோம்.

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதால் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று உடன்பாடு எட்டப்பட்ட 2 மணி நேரத்திலேயே மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+