நாளை நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்... புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி அவையில் புயலைக் கிளப்ப திட்டமிட்டுள்ளது காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகள்.
இதனிடையே மக்களவை கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை தொடங்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

நாடாளுமன்றம்
17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடர் நாளை காலை தொடங்கவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிப்பதற்கு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகள்
வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்த நிலை, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து அவையில் புயலை கிளப்ப காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள அரசு தரப்பும் தயாராக உள்ளது.

சுமூகமாக
குளிர்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

இருக்கை மாற்றம்
பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா இப்போது சிலுப்பிக்கொண்டு நிற்பதால், மக்களவையில் சிவசேனா எம்.பி.க்களுக்கான இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் நாடாளுமன்ற அலுவல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாத்தி கம்மிங்.. மீண்டும் டெல்லிக்கு பறக்கும் விஜய்! ’மேலிட’ தலைவர்களை சந்திக்க வாய்ப்பு! பரபர களம்! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications