இரண்டு தரப்பும் எதிர் திசையில் போறாங்க பாருங்க.. காங்கிரஸில் பிளவு இருக்கு.. லோக்சபாவில் மோடி அதிரடி
டெல்லி: காங்கிரஸ் கட்சி பிளவு பட்டு விட்டது, குழம்பிப் போயிருக்கிறது என்று லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து லோக்சபாவில் இன்று உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் விவசாயிகள் தொடர்பான பிரச்சனை பற்றி பேசிய போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனத்தை முன் வைத்தார் நரேந்திர மோடி.

பழைய கட்சி
அவர் பேசியதை பாருங்கள்: காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் மிகப் பழமையான ஒரு கட்சி. 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட கட்சி. ஆனால், இப்போது நிலைமை பரிதாபமாக இருக்கிறது. ராஜ்யசபாவில் அந்த கட்சி ஒரு முடிவை எடுத்து ஒரு கோணத்தில் பயணிக்கிறது. ஆனால் லோக்சபாவில் அதே கட்சி வேறு கோணத்தில், வேறு திசையில் பயணிக்கிறது.

காங்கிரஸ் உடைந்துள்ளது
காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் இருக்கிறது, காங்கிரஸ் கட்சி உடைந்து போயிருக்கிறது. இது அந்த கட்சிக்கும் நல்லது கிடையாது. நாட்டின் பிரச்சனைகளுக்கு, தீர்வு காண்பதற்கும் இது உதவாது. இதைவிட துரதிஷ்டவசமானது வேறு எதுவும் இருக்க முடியாது.

லோக்சபா நிலைப்பாடு
காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் ராஜ்யசபாவில் இருக்கிறார்கள். அவர்கள் விவாதத்தின்போது மிகவும் ஆர்வத்தோடு பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்து வைக்கிறார்கள். ஆனால் லோக்சபாவில் வெளிநடப்பு செய்கிறார்கள். எதிலும் ஆக்கபூர்வமாக பங்கேற்பது கிடையாது. காலம் இதற்கான பதிலை சொல்லும்.

மக்கள் மதிப்பு
லோக்சபாவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, கூச்சல் குழப்பம் செய்வது போன்றவை மிகவும் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. உண்மைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதில்தான் இவர்கள் கவனம் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளால் மக்களின் நன்மதிப்பை பெற்று விடமுடியாது, என பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications