ஆந்திரா - தெலங்கானாவை இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தையும், தெலங்கானாவின் செகெந்திராபாத்தையும் இணைக்கும் புதிய 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ரயிலுடன் சேர்த்து இதுவரை 8 'வந்தே பாரத்' ரயில்கள் இந்தியாவில் மக்கள் பயன்பாட்டுக்கு இயங்கி வருகின்றன.
இந்த ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 'வந்தே பாரத்' ரயில்கள் இந்தியாவின் அடையாளமாக திகழ்வதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அடுத்தடுத்து களமிறங்கும் 'வந்தே பாரத்' ரயில்கள்
இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. டெல்லி - வாரணாசி, டெல்லி - காத்ரா, குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை, இமாச்சலப் பிரதேசத்தின் அம்ப் அண்டவ்ரா - புதுடெல்லி, கர்நாடகாவின் மைசூரு - சென்னை உட்பட 7 'வந்தே பாரத்' ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரயில் என்பதால், இந்திய மக்கள் மத்தியில் இந்த ரயிலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

விமர்சனத்திற்கு குறைவில்லை
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ள போதிலும், அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதால் 'வந்தே பாரத்' ரயில்கள் அதிக அளவில் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகின்றன. பல்வேறு ரயில் தடங்களில் ஓடிய 'வந்தே பாரத்' ரயில்கள் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ரயில்களின் முன்பகுதிகள் கடுமையாக சேதம் அடைந்தன. ஃபைபர் பிளாஸ்டிக்கால் 'வந்தே பாரத்' ரயிலின் முகப்பு பாகங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவை இவ்வாறு சேதம் அடைகின்றன. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகின.

ஆந்திரா டூ தெலங்கானா..
இந்நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தையும், தெலங்கானாவின் செகெந்திரபாத்தையும் இணைக்கும் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இது, இந்தியாவில் இயக்கப்படும் 8-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் என்ற பெருமையை பெருகிறது.

"இந்தியாவின் அடையாளம்"
இந்த 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேசுகையில், "புதிய இந்தியாவின் மன உறுதி மற்றும் திறனின் அடையாளமாக விளங்குகிறது 'வந்தே பாரத்' ரயில். உண்மையில் சொல்லப்போனால், இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகவே வந்தே பாரத் ரயில் மாறிப் போய்விட்டது. தெலங்கானா, ஆந்திராவுக்கு இடையேயான பழமையான கலாச்சார ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த இந்த வந்தே பாரத் ரயில் பெரும் பங்களிப்பை வழங்கும் என நம்புகிறேன்" என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications