'முப்பது கோடி முகமுடையாள்'.. இந்தியாவின் சிறப்பை பாரதியின் கவிதையில் சொன்ன மோடி
Recommended Video
டெல்லி: மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று பேசும் போது மகாகவி பாரதியின் பாடலை பாடி நம் நாட்டின் மொழிகளின் சிறப்புகள் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரலில் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
அந்த வகையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பிரம்மபுத்திரா புஷ்கர திருவிழா பற்றி நாட்டில் அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை என்ற தெரிவித்தார்.

தாய்மொழி
அத்துடன் இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் சிறப்பு குறித்து விரிவாக பேசினார். அப்போது ரங் சமூகம் எப்படி சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தங்களது தாய்மொழியை உயிர்ப்பித்தது என்பதைச் சொல்லும் போது மகாகவியின் முப்பது கோடி முகமுடையாள் என்ற வரிகளை தமிழிலேயே பேசி மேற்கோள் காட்டினார். பின் அதன் பொருளை இந்தியிலும் விளக்கினார்.

18 மொழிகள்
இது தொடர்பாக அவர் கூறும் போது 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் புலவர் பாரதியார் மொழி குறித்து பாடியுள்ளதாகவும் இந்தியாவிற்கு பல்வேறு முகங்கள் இருந்தாலும், அதற்கு உருவம் ஒன்று மட்டுமே என்றும், 18க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்தாலும் அதன் எண்ணம் ஒன்று மட்டுமே என்று பாரதியார் கூறியுள்ளதை விவரித்தார்.

மேற்கோள் காட்டினார்
"முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று தமிழில் பாரதியின் பாடலை பாடியதுடன் அதன் இந்தி மொழிபெயர்ப்பையும் எடுத்துக்கூறினார்.

அசத்த போகிறார்
தமிழின் சிறப்புகளைஅடிக்கடி பேசிவரும் அடுத்த தேர்தலுக்கு வரும் போது தமிழைமுழுயைமாக கற்று பிரச்சாரத்தில் தமிழில் முழுமையாக பேசி ஓட்டுக்கேட்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தமிழ் மொழி மீது அந்த அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறார் பிரதமர் மோடி
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications