Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“யசோபூமி”.. டெல்லியில் மோடி திறந்து வைக்கும் பிரமாண்டம்! இப்படி அரங்கத்தை பார்த்தே இருக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று யசோபூமி என்ற பெயரில் மிகப்பெரிய மாநாட்டு அரங்கத்தை தலைநகர் டெல்லியில் இன்று திறந்து வைக்க உள்ளார். அதில் இருக்கும் சிறப்புகள் என்ன? விரிவாக பார்ப்போம்.

தலைநகர் டெல்லியில் யசோபூமி என்ற பெயரில் சர்வதேச மாநாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதன் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளான இன்று அதை திறந்து வைக்க உள்ளார். அத்துடன் துவாரகா செக்டார் 21 முதல் துவாரகா 25 புதிய மெட்ரோ ரயில் நிலையம் வரையிலான டெல்லி விமான நிலையம் மெட்ரோ எkஸ்பிரஸ் லேனையும் பிரதமர் மோடி மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

PM Modi is going to inaugurate the biggest convention hall named Yashobhoomi in Delhi

டெல்லியில் இன்று பிரதமர் மோடியால் திறக்கப்பட இருக்கும் யசோபூமி மாநாட்டு அரங்கம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கண்கவரும் கட்டிட கலையோடு காட்சியளிக்கிறது. துவாரகா பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள உலகத் தரம் வாய்ந்த இந்த யசோ பூமி மாநாட்டு மையம் அமைக்க ரூ.4,400 கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.

73 ஆயிரம் சதுர மீட்டர் பரந்து விரிந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த யசோ பூமி மாநாட்டு மையத்தில் 15 மாநாட்டு அரங்குகள் உள்ளன. இதில் மைய மண்டபமும் அடக்கம். இதில் பிரமாண்டமான 2,500 சிறப்பு விருந்தினர்கள் தங்கும் வகையிலான ராட்சத பால்ரூம் மற்றும் 11 ஆயிரம் பேரை உள்ளடக்கக் கூடிய 13 ஆலோசனை அறைகளும் உள்ளன.

இதன் கண்காட்சி மையத்தின் பரப்பளவு 1.07 லட்ச, சதுர மீட்டர் ஆகும். உலகளவிலான பல்வேறு சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தும் வகையில் இது பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டிடத்தின் மேலேயே வைக்கப்பட்டு இருக்கும் ராட்சத LED திரை இதனை மேலும் அழகாக்கி இருக்கிறது.

இதன் முழு அரங்கமும் 6000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதை திறந்து வைத்த பிறகு மதியம் 3 மணிக்கே இது செயல்பாட்டுக்கு வருகிறது. மெட்ரோ ரயில் மூலம் எளிதில் வந்து செல்லும் வகையிலேயே அருகில் மெட்ரோ நிலையத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

வாகனங்கள் நிறுத்துவதற்கு மிகப்பெரிய பார்க்கிங் ஏரியா ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கார்களை நிறுத்த நிலத்தடியில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 3,000 கார்களை வரை நிறுத்த முடியும். குறிப்பாக எலெக்ட்ரிக் கார்களுக்காக 100 எலெக்ட்ரிக் சார்ஜிங் போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. நவீன இருக்கை வசதிகள், அதி நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பிரமாண்டமாக காட்சி தருகிறது இந்த யசோ பூமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+