பிரதமர் மோடி சுற்றுப்பயண அறிவிப்பிலும் ‘இந்தியா’ இல்லை.. ‘பாரத்’.. அடுத்த ‘ஷாக்’ கொடுத்த பாஜக அரசு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தோனேஷியா புறப்படும் நிலையில் அதுகுறித்த நிகழ்ச்சி நிரலில் 'பாரத்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜி20 அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என பெயர் மாற்றப்பட்ட நிலையில் பிரதமர் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பிலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பெயரை "பாரத்" என மாற்றம் செய்யும் மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக குடியரசுத் தலைவரின் சார்பில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரவு விருந்து அழைப்பிதழில் President of Bharath எனப் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான்- இந்தியா மாநாடு மற்றும் 18வது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை இந்தோனேசியா செல்ல உள்ள நிலையில், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரல் அறிவிப்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசியா பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள பிரதமர் மோடியின் பயண நிகழ்ச்சி நிரலில் 'பாரதப் பிரதமர்' (Prime Minister of Bharat) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா மற்றும் பாரத் என இரண்டு வார்த்தைகளும் இருந்தாலும், இதுவரை பிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா, பிரசிடென்ட் ஆப் இந்தியா என்று தான் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு வந்தது. ஆனால், திடீரென இதில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்தியா என்ற வார்த்தைக்குப் பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 'இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். 'இந்தியா' என்ற பெயரை கூட்டணிக்கு வைத்துள்ளதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், 'இந்தியா' என கூட்டணிக்கு பெயர் வைக்க தடையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தான் தற்போது இந்தியா என்ற நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற பாஜக அரசு தீவிரமாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியா என்ற வார்த்தைக்கு மாற்றாக 'பாரத்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் தொடர் குரலாக உள்ள நிலையில், அதனை இப்போது பாஜக அரசு அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறது.
இது எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தோல்வி பயத்தில் இதுபோன்று செய்வதாகவும், 9 ஆண்டுகளில் இந்தியாவின் பெயரை மற்றுமே பாஜகவால் மாற்ற முடிந்திருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications