மன்கிபாத் வானொலி: ஓமிக்ரான் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
மன்கிபாத் வானொலி: ஓமிக்ரான் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்
Recommended Video
டெல்லி: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் குறித்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,987 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 162 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

422 பேருக்கு ஓமிக்ரான்
இந்தியாவில் தற்போதைய நிலையில் 76,766 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மொத்த ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 422.

பிரதமர் மோடி உரை
நாட்டில் ஓமிக்ரான் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்று இரவு திடீரென நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையில், ஓமிக்ரான் வைரஸ் பரவல் குறித்த அச்சம் வேண்டாம். ஓமிக்ரான் பரவலை எதிர்கொள்ள நாடு தயார் நிலை உள்ளது. அத்துடன் ஜனவரி 3-ந் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்; ஜனவரி 10-ந் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படும். உலகிலேயே இந்தியாவில்தான் உலகில் முதலாவது டி.என்.ஏ. கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல் மூக்கு வழியாக தடுப்பூசி செலுத்தும் முறை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறியிருந்தார்.

மோடி உரை முக்கியமான அம்சங்கள்
பிரதமர் மோடி திடீரென இன்னும் 15 நிமிடத்தில் உரையாற்றப் போகிறேன் என அறிவித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி, லாக்டவுன் அறிவிப்பை வெளியிடுவாரோ என்கிற எதிர்பார்ப்பும் நிலவியது. இருந்தபோதும் ஓமிக்ரான் குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமது நாடு எந்தந்த வகையில் தயார் நிலையில் உள்ளது என்பதை பிரதமர் மோடி விளக்கி இருந்தார்.

மன்கிபாத் வானொலி உரை
இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது இந்த ஆண்டின் கடைசி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி. இதில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவலை இந்தியா ஒரு குடும்பமாக எதிர்த்து நிற்கிறது. ஓமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும் கொரோனா தடுப்பூசிகள் போடுவதில் இந்தியா மிகப் பெரிய சாதனை படைத்திருக்கிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications