ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு- முக்கிய ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 3-வது அலை படுதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.56 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகின்றன அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி நாட்டில் 5,90,611 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் 3,000-த்தை கடந்துள்ளது.

2021 மே மாதம் போல...
இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,553 ஆக இருந்தது. தற்போது மீண்டும் அந்த நிலைமை உருவாகி இருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000-த்தை கடந்துள்ளது.

கட்டுப்பாடுகள், ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு லாக்டவுன் அமலில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. நாட்டில் தற்போது 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இன்று ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவல் நிலவரம், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications