அச்சுறுத்தும் கொரோனா.. இந்தியாவில் கட்டுப்பாடுகள் வருமா? உயர்நிலைக் குழுவுடன் இன்று மோடி ஆலோசனை
டெல்லி: இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் வகை வைரஸ்கள் இந்தியாவில் கண்டறியப்பட்ட சூழலில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மீண்டும் பயமுறுத்தும் சீனா
கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என உலக நாடுகள் அனைத்தும் நிம்மதி பெருமூச்சு விட்ட சூழலில், சீனாவில் மீண்டும் அதிவேகம் எடுத்திருக்கிறது கொரோனா பரவல். மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் சீனாவில் பரவி வருவதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகள் நோயாளிகளாலும், இடுகாடுகள் சடலங்களாலும் நிரம்பி வழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் முந்தைய காலங்களை போல அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் சீன வகை கொரோனா
சீனாவில் மீண்டும் கொரோனா பரவுவதால் இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் சீனாவில் வேகமாக பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் BF.7 மற்றும் BF.12 வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ்கள் இந்தியாவைச் சேர்ந்த 4 பேரை தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத் துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மோடி ஆலோசனை
இந்த சூழலில்தான், நாட்டில் கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்நிலைக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். சுகாதாரத் துறைச் செயலர், உள்துறைச் செயலர், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது இடங்களில் மக்களை முகக்கவசம் அணிய வைப்பது, கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

"முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்"
இந்நிலையில், மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்க சுகாதாரத் துறை என்னென்ன நடவடிக்கைளை எடுக்கப் போகிறது? ஒருவேளை, கொரோனா பரவல் அதிகரித்தால் அதை சமாளிக்க மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்கின்றனவா? விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன? என்பன உள்ளிட்ட விஷயங்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications