உச்சத்தில் கொரோனா.. தடுக்க என்ன வழி.. மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சமாக இருந்து வரும் நிலையில் இன்று மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த லாக்டவுன்கள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 80 லட்சத்தை தாண்டியது- தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா

சென்னையில் மீண்டும் லாக்டவுன்
ஆனால் கொரோனாவின் பாதிப்பு முன்பைவிட மிக அதிகமாக உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் லாக்டவுன் அமலாக்கப்பட உள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் லாக்டவுன் மீண்டும் அமலாக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மோடி இன்று ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பாதிப்புகள் தொடர்பாக மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்துகிற 6-வது ஆலோசனை கூட்டம் இது.

21 மாநில முதல்வர்கள்
செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் முதலாவது ஆலோசனைக் கூட்டம் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறுகிறது. இதில் 21 மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள் பங்கேற்கின்றனர். பஞ்சாப், கேரளா, கோவா, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநில முதல்வர்கள் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுஉள்ளனர்.
Recommended Video

15 மாநில முதல்வர்கள் பங்கேற்பு
இதனையடுத்து புதன்கிழமையன்று 15 மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் புதன்கிழமையன்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications