ராகுல் காந்தியா? மோடியா? யார் பிரதமராக வேண்டும்.. இந்த 3 மாநில மக்கள் சொல்வதை பாருங்க!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தல் வெகுவேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் காரணமாக நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று இதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

மூன்று மாநிலம்
அனைத்து மாநிலங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்படாமல் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, அசாம் மாநிலங்களில் மட்டும் தற்போது இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா, யார் மக்களின் தேர்வு என்று இதில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம்
அதன்படி ஆந்திர பிரதேச மக்களில் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 38% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதமும் அதே 38% பேர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் அங்கு குறையவோ, ஏறவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தி
ஆனால் ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகழ் உயர்ந்துள்ளது. ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 51% ஆக உயர்ந்து இருக்கிறது. அவருக்கு ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு கூடி உள்ளது.

தெலுங்கானா நிலை
தெலுங்கானாவில் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 41% பேர்தான் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே சமயம் ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று தெலுங்கானாவில் 2018 செப்டம்பர் மாதம் 39% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 43% ஆக உயர்ந்து உள்ளது.

அசாம் நிலை என்ன
ஆனால் அசாமில் மோடிதான் எங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 51% பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 54% பேர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று அசாமில் 2018 செப்டம்பர் மாதம் 28% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 32% ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications