டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராகுல் காந்தியா? மோடியா? யார் பிரதமராக வேண்டும்.. இந்த 3 மாநில மக்கள் சொல்வதை பாருங்க!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராகுல் காந்தியா?.. மோடியா?.. 3 மாநில மக்கள் சொல்வதை பாருங்க!- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று ஆந்திர பிரதேசத்தில் 51% மக்கள் விரும்புவதாக பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    லோக்சபா தேர்தல் வெகுவேகமாக நெருங்கி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் காரணமாக நாடு முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து பொலிட்டிக்கல் ஸ்டாக் எக்சேஞ்ச் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரவேண்டும் என்று இதில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    மூன்று மாநிலம்

    மூன்று மாநிலம்

    அனைத்து மாநிலங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்படாமல் ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, அசாம் மாநிலங்களில் மட்டும் தற்போது இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா, யார் மக்களின் தேர்வு என்று இதில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்

    அதன்படி ஆந்திர பிரதேச மக்களில் பிரதமர் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 38% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதமும் அதே 38% பேர் மோடிதான் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். பிரதமர் மோடியின் புகழ் அங்கு குறையவோ, ஏறவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    ஆனால் ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகழ் உயர்ந்துள்ளது. ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று கடந்த 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 51% ஆக உயர்ந்து இருக்கிறது. அவருக்கு ஆந்திராவில் மக்கள் செல்வாக்கு கூடி உள்ளது.

    தெலுங்கானா நிலை

    தெலுங்கானா நிலை

    தெலுங்கானாவில் மோடிதான் மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 44% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 41% பேர்தான் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். அதே சமயம் ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று தெலுங்கானாவில் 2018 செப்டம்பர் மாதம் 39% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 43% ஆக உயர்ந்து உள்ளது.

    அசாம் நிலை என்ன

    அசாம் நிலை என்ன

    ஆனால் அசாமில் மோடிதான் எங்கள் பிரதமர் ஆக வேண்டும் என்று 2018 செப்டம்பர் மாதம் 51% பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் 54% பேர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறியுள்ளனர். ராகுல்தான் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்று அசாமில் 2018 செப்டம்பர் மாதம் 28% பேர் தெரிவித்து இருக்கிறார்கள். 2019 பிப்ரவரி மாதம் இது 32% ஆக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Political Stock Exchange opinion poll: Who is the most preferred PM candidate? These 3 states answered in their style.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X