உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.. ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகர்ஜி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ராணுவ மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜிக்கு சிகிச்சை அளிக்கும் ஆர் ஆர் ராணுவ மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகையில் நேற்று காலை வரை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமா நிலைக்கு சென்று விட்டார்.

Pranab Mukherjees health condition remains unchaged

அவருக்கு நுரையீரலுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் தொடர்ந்து செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். பிரணாப் முகர்ஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி ஆர் ஆர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கடந்த 10-ஆம் தேதி தலையில் ரத்தம் கட்டியிருந்ததை அடுத்து அது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டது. இதனிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுவிட்டது. கடந்த 13 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

எனினும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+