ஆசிரியர் தினம் - ஜனாதிபதி திரௌபதி முர்மு வாழ்த்து - 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!
டெல்லி: நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களை உருவாவதற்கு ஆசிரியர்களே காரணம் என, ஆசிரியர் தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிக்க உள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணியை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, ஆண்டுதோறும் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படும்.

ஆசிரியர் தின வாழ்த்து
ஆசிரியர் தினமான இன்று, ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் நலனுக்காக எல்லா வகையிலும் உழைக்க தயாராக இருக்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாவதற்கு ஆசிரியர்களே காரணம் என்று பாராட்டியுள்ளார் இதேபோல், பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் ஆசிரியர்
ஆசிரியர் தினத்தன்று, சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்காக, இணையதளம் வாயிலாக நடைபெற்ற மூன்று கட்ட நடைமுறைகள் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரி, பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்பட நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் இடம்பெற்றுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருது
ஆசிரியர் தினத்தின்று, கற்பித்தலில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் தினமான இன்று, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழ்நாட்டை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படுகிறது.

பிரதமர் கலந்துரையாடல்
தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் உட்பட 45 ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். மாலை 4:30 மணிக்கு லோக் கல்யாண் மார்க்கில், ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் வென்றவர்களுடன் கலந்துரையாடுகிறார். அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் மாணவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்தி வரும் சிறந்த ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடி கௌரவிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications