கிறிஸ்துமஸ் பண்டிகை... உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டட்டும்... குடியரசு தலைவர் வாழ்த்து
டெல்லி: கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் எங்கும் அமைதியை நிலைநாட்டவும், மனிதத்தன்மையை காக்கவும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிது. தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:-
கிறிஸ்துமஸ் தினத்தில் எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த பண்டிகை மூலம் நாம் மற்றவர்களிடம் அன்பு மற்றும் கருணை ஆகியவற்றால் மறவர்களின் இதயங்களை ஒளிரச் செய்கிறோம்.
மனித குலத்திற்கு வெளிச்சமாக திகழ்பவர் இயேசு பிரான்... தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து..!
கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் அமைதியை வளர்க்கும் மற்றும் மனிதகுலத்தில் நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உதவும் என்று நம்புகிறேன். இந்த புனித திருவிழாவில் இயேசு கிறிஸ்துவின் அன்பு, இரக்கம் மற்றும் மனிதநேயம் பற்றிய போதனைகளை பின்பற்றி சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக பாடுபடுவோம் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.