ஆதரவு கடிதம் வழங்கிய நிதிஷ், சந்திரபாபு நாயுடு.. என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு
டெல்லி: மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வரும் நிலையில், இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3வது முறையாக பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டிக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால், பாஜக இந்த முறை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் தயவு தற்போது பாஜகவுக்கு தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணிக்கு 292 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 இடங்கள் உள்ளன. பிற கட்சிகள் 17 இடங்கள் பெற்றுள்ளன. இந்தியா கூட்டணிக்கு ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு எண்ணிக்கை இல்லை என்றாலும் கூட பாஜகவை ஆட்சி அமைக்க விட மாட்டோம் என்றும் அதற்கான வியூகங்கள் எங்களிடம் உள்ளன என்றும் கூறி வருகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சிக்கலாம் என்று சொல்லப்படுவதால் வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் இருந்து தேசிய தலைநகரில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. மோடி வரும் 8 ஆம் தேதி பதவியேற்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விரைவில் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் மோடி இல்லத்தில் தேசியஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக 3வது முறையா மோடி தேர்வு செய்யப்பட்டார்.
சந்திரபாபு நாயுடு, ஜேடியு தலைவர் நிதிஷ்குமார் ஆகியோர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடிதம் மூலம் எழுதிகொடுத்துள்ளனர். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்க தேசிய ஜனநாயக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. 15 கட்சிகளின் ஆதரவை அடுத்து பிரதமர் மோடியை தலைவராக தேர்வு செய்து தீன்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைவராக பிரதமர் மொடி ஒருமனதாக இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வரும் நிலையில், இன்று எண்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 3வது முறையாக பிரதமர் மோடி என்டிஏ கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின்












Click it and Unblock the Notifications