அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற மோடி..வெள்ளை மாளிகையில் விருந்து..நாடாளுமன்றத்தில் பேச்சு
டெல்லி: அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தனி விமானத்தில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார். ஐநாவில் நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் விருந்தில் பங்கேற்கிறார். அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார். பிரதமரான பின்னர் முதன் முறையாக அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
Recommended Video
ஐநாவில் யோகா: அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு ஐ.நா. சபை தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்கிறார். பின்னர், அங்கிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு செல்லும் மோடி, நாளை இரவு அதிபர் ஜோ பைடன் தம்பதியர் வெள்ளை மாளிகையில் அளிக்கும் சிறப்பு இரவு விருந்தில் பங்கேற்கிறார். இதில் ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினரும் பங்கேற்க உள்ளனர்.

வெள்ளை மாளிகையில் விருந்து: அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நாளை மறுதினம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அன்று இரவு அமெரிக்க அரசு சார்பில் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் இரவு விருந்தில் கலந்துகொள்கிறார். உலகின் மிக நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படும். அதிபர் ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே அங்கு சிறப்பு இரவு விருந்து அளித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அவர் விருந்து அளிக்கும் 3வது உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார். இரு நாடுகள் இடையிலான உறவு வலுவடைந்து வருகிறது என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கமலா ஹாரிஸ் விருந்து: 23ஆம் தேதி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசுகிறார். பின்னர், இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அளிக்கும் மதிய விருந்தில் பங்கேற்கிறார். பிறகு அமெரிக்காவின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களை சந்தித்துப் பேசுகிறார். 23ஆம் தேதி இரவு இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
பேச்சுவார்த்தை: இந்த பயணத்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்கள் முக்கியத்துவம் பெறும். தொழில், முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், தொலைத்தொடர்பு, விண்வெளி உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று மத்திய வெளியுறவு துறை செயலர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது போர் விமானங்களுக்கு தேவையான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பிரதமர் மோடியும் அதிபர் பைடனும் ஆலோசனை நடத்துவார்கள். இதுதொடர்பாக அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக் - இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.
மோடிக்கு வரவேற்பு: பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு தலைநகர் வாஷிங்டன் உட்பட 20 அமெரிக்க நகரங்களில் நேற்று முன்தினம் பேரணிகள் நடைபெற்றன. இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற இப்பேரணிகளில் 'மோடி, மோடி' கோஷம் விண்ணை எட்டியது. வந்தே மாதரம் பாடலும் இசைக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு 22ஆம் தேதி, வெள்ளை மாளிகையில் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. வெள்ளை மாளிகை வளாகத்தில் நுழைய வாழ்நாளில் ஒருமுறையாக கிடைத்துள்ள வாய்ப்பை அனுபவிக்கும் வகையில், அதற்கான டிக்கெட் பெற இந்தியர்களிடையே போட்டா போட்டி நடக்கிறது. நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் மோடி உரையாற்றுவதை காணவும் டிக்கெட் பெற போட்டி நடக்கிறது. வாஷிங்டனில் ரொனால்டு ரீகன் மையத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே மோடி பேசும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். அந்த டிக்கெட்டுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது
மோடி ட்வீட்: அமெரிக்கா புறப்படும் முன்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அமெரிக்காவுக்குப் புறப்படுகிறேன். நியூயார்க் நகரம் மற்றும் வாஷிங்டன் டிசியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறேன். இதில், ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டங்கள், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உடனான பேச்சு, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரை உள்ளிட்டவை அடங்கும். அமெரிக்காவில், வணிகத் தலைவர்களைச் சந்திக்கவும், இந்திய சமூகத்துடன் கலந்துரையாடவும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனைத் தலைவர்களைச் சந்திக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். வர்த்தகம், புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளில் இந்திய - அமெரிக்க உறவுகளை ஆழப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.
எகிப்து பயணம்: அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, வரும் 24, 25ஆம் தேதிகளில் எகிப்தில் மோடி பயணம் மேற்கொள்கிறார். அப்போது, தலைநகர் கெய்ரோவில் உள்ள அல்-ஹக்கீம் மசூதிக்கு செல்கிறார். கடந்த 11ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த மசூதியை இந்தியாவை சேர்ந்த தாவூதி போரா முஸ்லிம்கள் தங்கள் சொந்த செலவில் மறுகட்டமைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாம் உலகப்போரில் உயிரிழந்த இந்திய வீரர்கள் உட்பட அனைத்து வீரர்கள் நினைவாக கெய்ரோவில் புதிய நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும் பிரதமர் மோடி, நினைவிடத்தில் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்.
-
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
தேன்கூடு ஈரான்.. பாகிஸ்தான் செய்ய போகும் பெரிய உதவி.. இஸ்லாமாபாத் வரும் அமெரிக்க 'மாப்பிள்ளை' -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
இதை வச்சு தான் சீன் போட்டீங்களா? எப்15 போர் விமானத்தை குருவி போல் சுட்ட ஈரான்? அமெரிக்காவுக்கு ஆப்பு -
பஹ்ரைனில் சொதப்பிய US! பாதுகாப்பு டெக்னாலஜியில் பெரிய ஓட்டை! குடியிருப்புக்குள் பாய்ந்த ஏவுகணை












Click it and Unblock the Notifications