முதல் முறையாக புருனே செல்லும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 நாட்கள் பயணமாக இன்று புறப்பட்டுச் சென்றார். நரேந்திர மோடிதான் புருனே செல்லும் முதலாவது இந்திய பிரதமர். இந்தியா- புருனே இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் அமைகிறது. இதேபோல சிங்கப்பூர் செல்லும் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.
இந்தியா- புருனை நாடுகளிடையேயான தூதரக உறவுகள் 1984-ல் தொடங்கப்பட்டன. இருநாடுகளிடையேயான அரசு முறை உறவின் 40-ம் ஆண்டு தற்போது நடைபெற்று வருகிறது. 2018-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புருனே சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா பங்கேற்றார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் புருனே நாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொள்கிற முதலாவது பயணம் இது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறார். இந்த பயணம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கையில், இருநாடுகளின் உறவில் புதிய ஒத்துழைப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளது.
ஆசிய நாடுகளில் சிங்கப்பூருடனான இந்தியாவின் வர்த்தக உறவு மிக முக்கியமானது. உலக அளவில் இந்தியாவுடன் அதிகமான வர்த்தக உறவுகளைக் கொண்ட 6-வது நாடு சிங்கப்பூர். இந்தியாவின் அன்னிய நேரடி முதலீட்டில் சிங்கப்பூர் முக்கிய இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூர், இந்தியாவில் 11.77 பில்லியன் டாலர் முதலீடு செய்திருக்கிறது.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi embarks on a three-day official visit to Brunei Darussalam and Singapore.
— ANI (@ANI) September 3, 2024
At the invitation of Sultan Haji Hassanal Bolkiah, PM Modi is visiting Brunei Darussalam. PM Modi's Brunei visit will be the first-ever bilateral visit by an… pic.twitter.com/gH3inAfiOa
பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பயணத்தின் போது பல்வேறு சிங்கப்பூர் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications