கொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி!
டெல்லி: மிதமானது முதல் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க "அவசரகால பயன்பாட்டிற்காக" சொரியாசிஸ் தோல் நோயை குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் ( Itolizumab)என்ற மருந்தை பயன்படுத்த இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
Recommended Video
"இது ஏற்கனவே பல ஆண்டுகளாக சொரியாசிசுக்கு சிகிச்சையளிக்க பயோகான் அங்கீகரித்த மருந்து" என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி கூறினார்.
மருந்தை பயன்படுத்தும் முன்பாக, நோயாளியிடமிருந்து எழுத்துப் பூர்வமாக அவர்கள் சம்மதம் பெறப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்து மீது நம்பிக்கை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல மாநிலங்களிலும் லாக்டவுன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அல்லது மருந்துகளிலிருந்து மட்டுமே மக்களுக்கு இப்போது நம்பிக்கை உள்ளது. லாக்டவுனால் கொரோனாவை தடுக்க முடியவில்லை.

தீவிர நோயாளிகளுக்கு
இந்த நிலையில்தான், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கோவிட் -19 நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும், இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று டி.சி.ஜி.ஐ தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

பரிசோதனை வெற்றி
இந்தியாவில் கொரோனோவைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், எய்ம்ஸ் போன்றவற்றின் மருந்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிடைத்தது.

பயோகான் தயாரிப்பு
பயோகான் உருவாக்கிய ஐ.ஜி.ஜி 1 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளில், இடோலிஸுமாப் ஒன்றாகும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சோதனை அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களிலும் இடோலிசுமாப் பயன்படுத்தப்படுகிறது.

3 மருந்துகள் ரெடி
கொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன அல்லது பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில், 5 மருந்துகளில், ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே டி.ஜி.சி.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இரண்டு மருந்துகள் இறுதி சோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிக அதிக ஒற்றை நாள் கொரோனோ வைரஸ் அதிகரிப்புடன் உள்ளது இந்தியா.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications