ரபேல் ஆவணங்களை திருடிவிட்டார்கள்.. சுப்ரீம் கோர்ட்டில் அரசு பரபர குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?
ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கிறார்.
Recommended Video

டெல்லி: ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கிறார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தில் ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கி உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இதை விசாரித்து வருகிறது.
இதில் மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார். முதல் நாளே அவர் ரபேல் தொடர்பாக தி இந்து நாளிதழில் பத்திரிக்கையாளர் என்.ராம் வெளியிட்டு வந்த ஆதாரங்கள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பினார்.

ரபேல் ஆதாரம்
கேகே வேணுகோபால் தனது வாதத்தில், ரபேல் தொடர்பான முக்கிய ஆதாரங்களை திருடி இருக்கிறார்கள். ரபேல் தொடர்பாக முக்கிய ஆவணங்களை திருடி செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். அரசு ஒப்பந்த ரகசியங்களை தவறுதலாக கசியவிட்டு உள்ளனர்.

மனுக்கள்
இதை வைத்து தற்போது நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது (பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த மனு). இதை வைத்து தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ள கூடாது. ஆவணங்களை கசியவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செய்திகளை முதலில் வெளியிட்ட இரண்டு செய்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பு
இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. நீதிமன்ற தீர்ப்பை மாற்ற வேண்டும் என்பதற்காக கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர். கட்டுரைகள் மூலம் நீதிமன்ற தீர்ப்பில் மாற்றங்களை கொண்டு வர அவர்கள் நினைக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்புதான். அதனால் இந்த மனுக்களை ஏற்றுக்கொள்ள கூடாது, என்று அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆனால் இல்லை
முன்னதாக முதலில் தி இந்து நாளிதழ் மூலம் ரபேல் ஆதாரங்களை பத்திரிகையாளர் என்.ராம் வெளியிட்டார். ஆனால் அப்போது மத்திய அரசு, பாதி ஆவணம் மட்டுமே வெளியிட்டு இருக்கிறார்கள் என்றது. இந்த நிலையில் தற்போது ஆவணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த ஆவணங்களில் மத்திய அரசுக்கு எதிராக இருக்கும் தகவல்கள் பொய் என்று எங்குமே மத்திய அரசு இதுவரை கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமம்
இதையடுத்து வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்பது மிரட்டலுக்கு சமம். மனுதாரர்கள் உண்மையை வெளியிட கூடாது என்று அரசு தரப்பு மிரட்டுகிறது. அரசு ஆவணங்களை வெளியிட தகவல் அறிவும் உரிமை சட்டம் அனுமதி அளிக்கிறது.

ஆனால் இல்லை
அரசு தரப்பு வழக்கறிஞர் கேகே வேணுகோபால், ஆர்டிஐ மூலம் சாதாரண அரசு தகவல்களை மட்டுமே வெளியிட முடியும். ராணுவ ரகசியங்களை, பாதுகாப்பு தகவல்களை வெளியிட கூடாது, என்று குறிப்பிட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications