BREAKING NEWS LIVE: ரபேல்..அம்பானியின் நிறுவனம் குறித்தும் விசாரிக்கப்படும்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி
ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் வழக்கில் கசிந்த ஆதாரங்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
நாளிதழ்களில் ரபேல் தொடர்பாக கசிந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த அனைத்து வாதங்களும் முடிவிற்கு வந்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் கோரிக்கை. இது தொடர்பான மறுசீராய்வு வழக்கு இரண்டு மாதமாக நடந்து வருகிறது.
வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தி வருகிறது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இதில் தீர்ப்பு வழங்க உள்ளது
இந்த உத்தரவு ரபேல் வழக்கில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும்
ரபேல் ஆவணங்களை நீதிமன்றம் ஏற்கும் பட்சத்தில் அது திருப்பமாக இருக்கும்