லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் திடீர் மரணம்
டெல்லி: முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் நீண்ட கால நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சரும், சமீபத்தில் லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் திடீரென மரணமடைந்துள்ளார்.
முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முற்போக்குத் திட்டங்களில் ஒன்றான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் காரணகர்த்தாவே ரகுவன்ஷ் பிரசாத் சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

74 வயதான ரகுவன்ஷ் பிரசாத் சிங், லாலு பிரசாத்தின் மிக நெருங்கிய நண்பராக பல காலமாக அவருடன் பயணித்தவர். ராஷ்டிரிய ஜனதாதளத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கி வந்தவர். மத்திய அமைச்சராக மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். விவசாயிகளின் நிலையை நன்கு உணர்ந்து அதற்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர்.
இந்தியாவின் ஊரகப் பகுதிகளின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை முன்னின்று கொண்டு வந்தவர். அதில் ஒன்றுதான் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம்.. அதாவது 100 நாள் வேலை திட்டம். இந்தத் திட்டம்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2வது முறையும் தொடர்ந்து ஆட்சிக்கு வர முக்கிய உதவியாக இருந்தது.
சிலநாட்களுக்கு முன்பு நான் கட்சியை விட்டு விலகுகிறேன் என்று அறிவித்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மேலும் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதனால் அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தாவப் போவதாக பரபரப்பு கிளம்பியது. இந்த நிலையில்தான் அவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா வந்து குணமடைந்திருந்தவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். கொரோனாவுக்குப் பிந்தைய கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு உடல் நலம் குன்றியதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து அவர் மரணமடைந்தார்.
ரகுவன்ஷ் பிரசாத்தின் மரணம் பீகார் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளைப் பரப்பியுள்ளது. பீகாரின் வைஷாலி லோக்சபா தொகுதியிலிருந்து 5 முறை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரகுவன்ஷ் பிரசாத். இருப்பினும் 2014, 2019 ஆகிய இரு தேர்தல்களிலும் அவர் அடுத்தடுத்து தோல்வியடைந்தார். இதனால் சில காலம் அரசியலில் தீவிரமாக செயல்படாமலும் இருந்து வந்தார்.
லாலுவின் மகன் தேஜ்ஸவி யாதவுடன் இவருக்கு சரியான உறவு இல்லை. ஆரம்பத்தில் அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வந்தவர் பின்னர் உறவு கசந்ததால் ஒதுங்கிக் கொண்டார். இந்த நிலையில் லாலுவுடனும் உறவு கசந்தது. கடந்த லோக்சபா தேர்தல் சமயத்தில்,லாலு கட்சி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, நிதீஷ் குமாரை நமது கூட்டணியில் சேர்த்து பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று லாலுவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் ரகுவன்ஷ் பிரசாத். ஆனால் அதற்கு லாலு ஒத்துவரவில்லை.
இந்த நிலையில்தான் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார் ரகுவன்ஷ் பிரசாத். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மரணச் செய்தி வந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications