மக்களே உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா.. கோட்சே இந்தியா வேண்டுமா.. ராகுல் கேள்வி
Recommended Video

டெல்லி: மகாத்மா காந்தியின் இந்தியா வேண்டுமா இல்லை கோட்சேவின் இந்தியாவின் வேண்டுமா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில் உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மற்றொரு கையில்
ஒரு கையில் அன்பும், சகோதரத்துவமும் மற்றொரு கையில் வெறுப்பும் அச்சமும் உள்ளது. காந்தி பயமில்லாதவர். ஆண்டுக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் ஆங்கிலேயர்களுடன் அன்பையே பாராட்டினார்.

இந்தியா
ஆனால் சவார்கரோ தன்னை மன்னித்து விடுங்கள் என கடிதம் எழுதியவர். பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றி அருமையாக பேசி வருகிறார்.

சீன உற்பத்தி
ஆனால் அவரது சட்டை, கோட், ஷூ, செல்போன் ஆகியவை மேட் இன் சீனாவாக உள்ளது. மசூர் அஸாரை விடுவித்தது காங்கிரஸ் கிடையாது. பாஜகவினர் என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன் என்றார் ராகுல் காந்தி.

மசூத் அஸார்
தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஏற்கெனவே பாஜக ஆட்சியில் பிடிபட்டிருந்தார். ஆனால் ஒரு விமானத்தை கடத்தி, மசூத் அஸாரை விடுவிக்கும் படி தீவிரவாதிகள் நிபந்தனை விதித்தனர். பயணிகளின் பாதுகாப்பை கருதி, அவர்களது குடும்பத்தினரை விட்டு பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்த வைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். இதனாலேயே மசூத் அஸாரை விடுவிக்க நேர்ந்தது என பாஜக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications