Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள் போராட்டம்: சுவர்களை கட்டாதீங்க.. பாலங்களை கட்டுங்கள்.. மத்திய அரசு மீது ராகுல் பாய்ச்சல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் பகுதிகளில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 70 நாட்களை கடந்தும் நீடிக்கிறது. டெல்லி காசிப்பூர் எல்லைப் பகுதியில்தான் இப்போது போராட்டம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

 Rahul Gandhi attack Centre with Build Bridges, Not Walls Tweet

அதேநேரத்தில் டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதைத் தடுப்பதில் மத்திய அரசும் டெல்லி போலீசும் தீவிரமாக இறங்கி உள்ளன. காசிப்பூர், சிங்கு, திக்ரி எல்லைகளில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகள், இரும்புபேரிகார்டுகள் அமைத்து கடுமை காட்டி வருகிறது டெல்லி போலீஸ்.

ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் இப்படியான அடக்குமுறைகள் ஏவிவிடப்படுவதற்கு கடும் கண்டனமும் எழுந்துள்ளது. இந்த முள்வேலி, கான்கிரீட் தடுப்பு படங்களை தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, சுவர்களை கட்டாதீங்க.. பாலங்களை கட்டுங்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

சிவசேனா ஆதரவு

இதனிடையே காசிப்பூர் எல்லையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தை மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், விவசாயிகளுக்கு மகாராஷ்டிரா அரசு ஆதரவாக உள்ளது. விவசாயிகள் போராட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே ஆதரிக்கிறார். எங்களது ஆதரவை தெரிவிக்க இங்கு வந்திருக்கிறேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+