பூமராங்க்.. மன்மோகன் சிங் அரசின் சட்டத்தை எதிர்த்த ராகுல் காந்தி! அவருக்கே எதிராக திரும்பிருச்சே
டெல்லி: மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருப்பதால் அவர் நாடாளுமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மேற்கொண்ட நகர்வு தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. அந்த அவசர சட்டம் என்ன? விரிவாக காண்போம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற லில்லி தாமஸ் vs இந்திய அரசு வழக்கில் நாட்டின் தேர்தல் சட்டத்தின் கீழ், தண்டனை பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்கள் நீதித்துறையின் அனைத்து மேல்முறையீடுகளை கடந்தும் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படும் வரை பதவியில் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
அதை தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தி பிரிவு 8(4) ஐ உச்சநீதிமன்றம் நீக்கியது. நீக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிதிகள் 3 மாதங்களுக்குள் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வழிவகை செய்கிறது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இது அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது என்று கூறி உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதன் காரணமாக குற்றவாளியாக நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்ட மேலவை உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலே உடனடியாக அவர்கள் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும்.

அவசர சட்டம்
இதனால் அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு உதவும் வகையில், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அப்போது அதை எதிர்த்தது பாரதிய ஜனதாவோ இதர எதிர்க்கட்சிகளோ இல்லை.

ராகுல் காந்தியின் நகர்வு
மன்மோகன் சிங் அரசின் அந்த அறிவிப்பை எதிர்த்தது அதே கட்சியை சேர்ந்த ராகுல் காந்திதான். ஆம், மன்மோகன் சிங் அரசாங்கம் இயற்ற அவசர சட்டத்தை 'முழுமையான முட்டாள்தனம்' என்று கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமர்சித்தார் ராகுல் காந்தி. அதை கிழித்து எரிய வேண்டும் எனவும் அவர் முழக்கமிட்டார். ராகுல் காந்தியின் இந்த பகிரங்க விமர்சனம் காரணமாக மன்மோகன் சிங் அரசு அதை வாபஸ் பெற்றது.

பிரதமர் நாற்காலி
2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மன்மோகன் சிங் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி சொந்த கட்சி என்று பார்க்காமல் விமர்சித்ததன் மூலம் பிரதமர் நாற்காலிக்கு அவர் குறிவைத்ததாக கூறப்பட்டது.

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை
இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், 2 முறை இந்திய பிரதமராகவும் இருந்த மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிற கட்சியினரும் அப்போது குற்றம்சாட்டினர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருக்கிறது.

மக்களவையில் தகுதிநீக்கம்
இந்த நிலையில், மன்மோகன் சிங் அரசு 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த அவசர சட்டத்தை ராகுல் காந்தி எதிர்க்காமல் அது தற்போது நடைமுறையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி மக்களவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்க மாட்டார். பிரதமர் நாற்காலிக்கு குறித்து வைத்து ராகுல் காந்தி முன்னெடுத்த நகர்வு தற்போது அவரது எம்பி பதவிக்கே சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications