மோடியும், அனில் அம்பானியும் ஒரு போதும் தப்ப முடியாது.. ராகுல் காந்தி ஆவேசம்
Recommended Video

டெல்லி: உச்சநீதிமன்றம் ரபேல் விவகாரம் கொடுத்திருக்கும் தீர்ப்பு ஆச்சரியமாக உள்ளது. நிச்சயம் ஒரு நாள் விசாரணை நடைபெறத்தான் போகிறது. அதுவரை நாங்களும் ஓய மாட்டோம். அப்போது நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் நாட்டு மக்களிடம் அம்பலப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தரப்பில் பெரும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், பாஜக தரப்பு கொண்டாடி வருகிறது. இதை வைத்து நேற்று பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திலும் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது அவர் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டார். பேட்டியின்போது ராகுல் காந்தி கூறியதிலிருந்து:

திருடனேதான்
நாட்டின் காவலன் திருடன்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் என்னிடம் இல்லை. பிரதமர் மோடி இப்போது ஓடி ஒளியலாம். ஆனால் ஒருபோதும் அவரைக் காப்பாற்றவே முடியாது. நிச்சயம் ஒரு நாள் விசாரணை வரும். நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் அன்று அம்பலப்படுவார்கள்.

விசாரித்த அறிக்கை எங்கே
சிஏஜியின் கணக்கு தணிக்கை அறிக்கையை பொதுக் கணக்குக் குழு பார்த்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது வியப்பளிக்கிறது. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருப்பவர் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே. அவருக்கே அந்த அறிக்கையைக் காட்டவில்லை. எங்கே போனது சிஏஜியின் அறிக்கை. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் கணக்கில் எடுத்திருக்க வேண்டும்.

அடிப்படையிலேயே தவறு
சிஏஜி அறிக்கையை அடிப்படையாக வைத்தே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையை பொதுக் கணக்குக் குழு தலைவருக்குக் கூட காட்டவில்லை. ஆனால் கோர்ட் அதைப் பார்த்துள்ளது, படித்துள்ளது. அப்படியானால் அந்த சிஏஜி அறிக்கை எங்கே போனது? எங்களுக்குக் காட்டுங்கள்.

அந்த நாடாளுமன்றம் போயிருச்சா
ஒரு வேளை பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு அது போய் விட்டதா. அங்கு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா. அல்லது பிரதமர் அலுவலகம் தனக்கென தனியாக ஒரு பொதுக் கணக்குக் குழுவை வைத்துள்ளதா. அவர் செய்தாலும் செய்யலாம். நாட்டின் அனைத்து முக்கிய அமைப்புகளையும் சீர்குலைத்தவர் ஆயிற்றே என்றார் ராகுல் காந்தி.

மக்கள் அறிவார்கள்
5 மாநில சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு ராகுல் பதிலளிக்கையில், நாங்கள் ஆட்சியமைத்துள்ள மாநில விவசாயிகளுக்கு சொல்லிக் கொள்கிறேன். உங்களது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திருடர்கள் உங்களது பணத்தை திருடி விட்டனர். இந்த நாட்டின் காவலனே திருடன் என்று கூறினார் ராகுல் காந்தி.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications