13 மாநிலங்கள் 6,700 கி.மீ.. மணிப்பூர் டூ மும்பை.."பாரத் நியாய யாத்திரை".. தொடங்குகிறார் ராகுல் காந்தி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று ராகுல் காந்தி இரண்டாம் கட்ட பாரத் ஜடோ யாத்திரையை மணிப்பூரிலிருந்து தொடங்குகிறார். இதற்கு 'பாரத் நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டிருந்த பாரத் ஜடோ யாத்திரை காங்கிரஸுக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்கொண்டிருந்த இடர்பாடுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலத்தில் ஆட்சியை இழந்தது, சொந்த கட்சியின் நிர்வாகிகளே கட்சி தலைமைக்கு எதிராக புகார்களை எழுப்பியது, மூத்த தலைவர்களின் விலகல், பாஜகவுக்கு தாவிய முக்கிய நிர்வாகிகள் என காங்கிரஸ் தனது மொத்த பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வந்திருந்தது.

இப்படி இருக்கையில்தான் பாரத் ஜடோ யாத்திரை கட்சியின் தொண்டர்களுக்கு காங்கிரஸ் மீது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவர்கள் ராகுல் காந்தியுடன் வீதியிறங்கி நடந்தார்கள். களப்பணியில் ஈடுபட்டார்கள், 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தன்னை வளர்த்துக்கொள்ள முழுவீச்சில் செயல்பட்டது. அதன் அங்கமாக தொண்டர்கள் இருந்தார்கள். இந்நிலையில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி இன்று தொடங்குகிறார்.
மணிப்பூர் மாநிலத்திலிருந்து யாத்திரை தொடங்கப்படுகிறது. மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றப் பகுதிகளை உள்ளடக்கிய இந்த யாத்திரை இன்று மணிப்பூரில் தொடங்கி 67 நாட்கள் பயணத்திற்கு பிறகு மகாராஷ்டிராவின் மும்பையில் முடிவடைகிறது. சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடக்கிறார்.
பயண திட்டத்தின்படி இன்று ஒரு நாள் மட்டும் மணிப்பூரில் யாத்திரையை மேற்கொள்ளும் அவர், அடுத்த நாள் நாகலாந்து செல்கிறார். அங்கு 5 மாவட்டங்கள் 257 கி.மீ என 2 நாட்கள் பயணம் செய்கிறார். இதனையடுத்து, அசாமில் 8 நாட்களில் 17 மாவட்டங்களில் 833 கி.மீ தூரமும், அருணாச்சலப் பிரதேசம், மேகலாயாவில் தலா ஒரு நாள், மேற்கு வங்கத்தில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 523 கி.மீ தொலைவும், பீகாரில் 4 நாட்களில் 7 மாவட்டங்களில் 425 கி.மீ தூரம், ஜார்கண்டில் 8 நாட்களில் 13 மாவட்டங்களில் 804 கி.மீ என பயணம் மேற்கொள்கிறார்.
மேலும், ஒடிசாவில் 4 நாட்களில் 4 மாவட்டங்களில் 341 கி.மீ, சத்தீஷ்கரில் 5 நாட்களில் 7 மாவட்டங்களில் 536 கி.மீ, உத்தர பிரதேசத்தில் 11 நாட்களில் 20 மாவட்டங்களில் 1,074 கி.மீ, மத்திய பிரதேசத்தில் 7 நாட்களில் 9 மாவட்டங்களில் 698 கி.மீ, குஜராத்தில் 5 நாட்கள் 445 கி.மீ, மகாராஷ்டிராவில் 5 நாட்கள் 479 கி.மீ பயணம் மேற்கொண்டு இறுதியாக மார்ச் 21ம் தேதி மும்பையில் பயணத்தை முடிக்கிறார். ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பிஸியாக உள்ள மத்திய அரசு, மக்களை கண்டுக்கொள்ளவில்லை என இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications