வடக்கே வதைக்கும் குளிர்- கண்டெய்னர்களில் ஹீட்டர்கள்- ராகுல் யாத்திரைக்கு ஒரு வாரம் ரெஸ்ட்
டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரைக்கு ஒரு வாரம் ஓய்வு விடப்பட்டுள்ளது. பாதயாத்திரையில் பங்கேற்றவர்களின் கண்டெய்னர்களில் ஏசிக்கு பதில் ஹீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தலை முன்வைத்து இந்தியா ஒருங்கிணைக்கும் ஒற்றுமை யாத்திரையை செப்டம்பர் 7-ல் தமிழகத்தில் தொடங்கினார் ராகுல் காந்தி. இந்த யாத்திரையை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தற்போது சுமார் 2,000க்கும் அதிகமான கிலோ மீட்டர் கடந்து 100நாட்களை தாண்டி டெல்லியை சென்றடைந்துள்ளது இந்த யாத்திரை. டெல்லியில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இந்த பேரணியில் இணைந்து கொண்டனர். அதேபோல் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹசனும் இந்தப் பேரணியில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் ஒரு வார காலத்துக்கு ராகுல் யாத்திரைக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடும் குளிர்வாட்டி வதைக்கிறது. இதனால் ராகுலுடன் வரும் கண்டெய்னர்களில் தங்குவம் தொண்டர்கள், நிர்வாகிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனையடுத்து கண்டெய்னர்களில் ஹீட்டர்கள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
கண்டெய்னர்கள் சீரமைக்கப்பட்ட பின்னர் வரும் 1-ந் தேதி முதல் இந்த யாத்திரை மீண்டும் தொடங்கும். டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் செல்கிறது ராகுல் காந்தி யாத்திர. அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்கிறது. ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி தமது பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்த பயணத்தின் போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை கடுமையாக தாக்கிப் பேசினார் ராகுல் காந்தி. வட இந்தியாவில் இந்தி பெல்ட்டான ராஜஸ்தானில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் ராகுல் காந்தி பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications