முப்படைகளின் ஒருங்கிணைந்து செயல்பட அசத்தல் திட்டம்! அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய தகவல்
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புத் துறை தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Recommended Video
நாட்டின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்றது. அதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பல விஷயங்கள் குறித்தும் பேசினார். பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் குறித்தும் அவர் பேசினார்.

ஒருங்கிணைந்த கமெண்ட் மையம்
நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், "கார்கில் ஆப்ரேஷன் விஜய் எனப் பல ஆப்ரேஷன்களில் கூட்டுச் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைந்த கமெண்ட் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். முப்படைகளுக்குமான இந்த ஒருங்கிணைந்த கமெண்ட் மையம் என்பது பாதுகாப்புத் துறையில் நீண்ட காலம் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய சீர்திருத்தம் ஆகும். கடந்த ஆண்டு முதலே இது தொடர்பாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.

நெகிழ்வு தன்மை
இந்த கமெண்ட் மையம் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் அமைய உள்ளது. இந்த புதிய செயல்முறைகளில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவைக் கடந்த ஜூன் 2021இல் மத்திய அரசு அமைந்து இருந்தது. எதிர்பாராத சூழல் ஏற்படும் போது, தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஏதுவானதாகவும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும் வகையிலும் இது இருக்கும் என அதிகாரி கூறினார்.

முக்கிய சீர்திருத்தம்
இந்த ஒருங்கிணைந்த கண்டிரோல் ரூம் முழுவதுமாக செயல்பட ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், விரைவாகப் பழைய முறையில் செயல்படும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நமது பாதுகாப்புத் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்தச் சீர்திருத்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தியாகிகள்
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் மேலும் பேசுகையில், "நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க ராணுவ வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நாடு எப்போதும் மறக்க முடியாது. தியாகிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் மிகுந்த மரியாதை அளிப்பது மக்களின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். உங்கள் உதவிகளைத் தியாகிகளின் குடும்பத்தினருக்குச் செய்யுங்கள்.

பாதுகாப்பு ஏற்றுமதி
உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருந்து.. ஆனால், இன்று உலகின் மிக முக்கிய ஏற்றுமதியாளராக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. பாதுகாப்பு ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள 25 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. 13,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை நாடு ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. 2025-26ஆம் ஆண்டுக்குள் அதை ₹35,000 முதல் ₹40,000 கோடியாக உயர்த்துவதே இலக்கு" என்றார்.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications