Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கோல் சரியான இடத்துக்கு வந்திருக்கு.. ஒரு எம்.பியாக பெருமையா இருக்கு.. மோடியை பாராட்டிய இளையராஜா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இசையமைப்பாளரும், ராஜ்யசபா நியமன எம்.பியுமான இளையராஜா, செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

டெல்லியில் ரூ.970 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மக்களவையின் சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார் பிரதமர் மோடி.

முன்னதாக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு இசையமைப்பாளரும், ராஜ்யசபா நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைவது பற்றியும் பெருமையுடன் தெரிவித்துள்ளார் இளையராஜா.

Rajya Sabha MP Ilayaraja says that he is proud and happy that the sengol has returned to its rightful place

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்த குறுகிய காலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தை கட்டுவதில் பங்காற்றியவர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகமான தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் தருணத்தில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை எடுப்பதற்கான உறைவிடமாக இந்தக் கட்டிடம் மாற நான் மனதார பிரார்த்திக்கிறேன்.

Rajya Sabha MP Ilayaraja says that he is proud and happy that the sengol has returned to its rightful place

ராஜ்ஜியங்களை வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக, பிரதமர் மோடி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளார். அவருடைய கடமைக்கு உட்பட்ட செயல்களும் அதையே பிரதிபலிக்கின்றன. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அவருடன் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் நான் மனதார வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+