3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. சொல்கிறார் ராம்தேவ்!
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா தொற்று காணாமலே போய்விடும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை மிகவும் மோசமான அளவுக்கு பாதித்திருகிறது கொரோனா. உலக நாடுகளால் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன.
மருத்துவ அறிவியல் உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு இதுதான் மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எதுவும் கூறவில்லை.

மருந்து கண்டுபிடித்துவிட்டோம்- ராம்தேவ்
ஆனால் கொரோனாவை தங்களது மருந்துகள் மூலம் 100% குணப்படுத்திவிடலாம்.. அதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்திருக்கிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது: நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி.

பெருமையாக சொல்கிறோம்
டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறோம். அனைவருக்குமே 100% குணமடைந்துவிட்டது. உலக நாடுகள் இன்னமும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது பதஞ்சலி நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம்.

100% குணமடைந்துவிட்டது
என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். 3 நாட்கள்தான்... 69% நோயாளிகள் குணமாகினர்.. மொத்தம் 7 நாட்கள்தான்... 100% நோயாளிகளுமே குணமடைந்துவிட்டனர்.
|
மருந்து விலை ரூ545
இந்த கொரோனில் என்பது மாத்திரைகளாக இருக்கும். இது கொரோனா எதிர்ப்பு மருந்துகளாகும். பேராசிரியர் பல்பீர் சிங் தோமர், ஆச்சார்யா ஆகியோரது முயற்சியால் இந்த கொரோனில் உருவாக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் கொரோனா மருந்து விலை ரூ545. இதனை 30 நாட்கள் பயன்படுத்தலாம். பதஞ்சலி ஸ்டோர்களில் மட்டுமே இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த மருந்தை பரிசோதிக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்தோம். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
-
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி












Click it and Unblock the Notifications