3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. சொல்கிறார் ராம்தேவ்!
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா தொற்று காணாமலே போய்விடும் என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை மிகவும் மோசமான அளவுக்கு பாதித்திருகிறது கொரோனா. உலக நாடுகளால் கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன.
மருத்துவ அறிவியல் உலகத்துக்கு கொரோனா பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதுவரை கொரோனாவுக்கு இதுதான் மருந்தாக பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எதுவும் கூறவில்லை.

மருந்து கண்டுபிடித்துவிட்டோம்- ராம்தேவ்
ஆனால் கொரோனாவை தங்களது மருந்துகள் மூலம் 100% குணப்படுத்திவிடலாம்.. அதற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டோம் என்று அறிவித்திருக்கிறது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். இது தொடர்பாக பாபா ராம்தேவ் கூறியதாவது: நாங்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தின் பெயர் கொரோனில் ஸ்வாசரி.

பெருமையாக சொல்கிறோம்
டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 280 கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்திருக்கிறோம். அனைவருக்குமே 100% குணமடைந்துவிட்டது. உலக நாடுகள் இன்னமும் கொரோனாவுக்கான மருந்தை கண்டுபிடிக்கவில்லை. இந்த தருணத்தில் எங்களது பதஞ்சலி நிறுவனம் மருந்து தயாரித்திருப்பதை பெருமையாக கொள்கிறோம்.

100% குணமடைந்துவிட்டது
என்.ஐ.எம்.எஸ். என்ற பல்கலைக் கழகத்தின் உதவியுடன் நாங்கள் நோயாளிகளுக்கு எங்களது மருந்தை கொடுத்து ஆய்வு செய்தோம். 3 நாட்கள்தான்... 69% நோயாளிகள் குணமாகினர்.. மொத்தம் 7 நாட்கள்தான்... 100% நோயாளிகளுமே குணமடைந்துவிட்டனர்.
|
மருந்து விலை ரூ545
இந்த கொரோனில் என்பது மாத்திரைகளாக இருக்கும். இது கொரோனா எதிர்ப்பு மருந்துகளாகும். பேராசிரியர் பல்பீர் சிங் தோமர், ஆச்சார்யா ஆகியோரது முயற்சியால் இந்த கொரோனில் உருவாக்கப்பட்டுள்ளது. பதஞ்சலியின் கொரோனா மருந்து விலை ரூ545. இதனை 30 நாட்கள் பயன்படுத்தலாம். பதஞ்சலி ஸ்டோர்களில் மட்டுமே இந்த மருந்துகள் கிடைக்கும். இந்த மருந்தை பரிசோதிக்க தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருந்தோம். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications