கொரோனாவைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ரூ. 1500 கோடி நிதி.. ரத்தன் டாடா அறிவிப்பு
டெல்லி: கொரோனாவைரஸுக்கு எதிராக போராடி வரும் தேசத்துக்கு உதவ முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா ரூ. 1500 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Recommended Video
மிகப் பெரும் நெருக்கடியில் தேசம் சிக்கியுள்ளது. இதுதான் நாம் தேசத்திற்கு சேவை செய்ய வேண்டிய நேரம்.. இதற்காக இந்த உதவியை வழங்குவதாக ரத்தன் டாடா டிவீட் மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரஸ் எதிர்ப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. இதற்காக பெருமளவில் நிதியும் தேவைப்படுகிறது. இதையடுத்து இந்தியாவின் பெரும் தொழிலதிபர்கள் பலரும் நிதியுதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். பொதுமக்களும் நிதியுதவி செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த வரிசையில் ரத்தன் டாடா மிகப் பெரிய நிதியுதவியை அறிவித்துள்ளார்.
முதல் கட்டமாக ரூ. 500 கோடி உதவியை அவர் டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் அறிவித்தார். இந்த பணத்தைக் கொண்டு களப் பணியில் ஈடுபட்டிருப்போருக்குத் தேவையான பாதுகாப்பு சாதனங்களை வாங்கவும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான செயற்கை சுவாசக் கருவிகளை தயாரிக்கவும், சோதனை கிட்டுகளை வாங்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் கொரோனாவைரஸ் எதிர்ப்பு்ப போரில் டாடா டிரஸ்ட் மற்றும் குழும நிறுவனங்கள் அனைத்தும் கை கோர்த்து செயல்படும் என்றும் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது மேலும் ரூ. 1000 கோடி நிதியுதவியை டாடா குழுமம் அறிவித்துள்ளது. இந்த நிதி டாடா சன்ஸ் சார்பாக வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை டாடா சன்ஸ் குழும தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாடா டிரஸ்டுகள் மற்றும் எங்களது தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் இந்த போரில் டாடா நிறுவனங்களின் உறுதியான செயல்பாட்டை வலியுறுத்தியுள்ளனர். அனைவரும் இணைந்து இந்த போரில் வெல்லத் தேவையான பணிகளை மேற்கொள்வோம்.
டாடா டிரஸ்ட் அறிவித்த உதவியோடு, கூடுதலாக டாடா சன்ஸ் சார்பில் ரூ. 1000 கோடி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை மேம்படவும், இந்த நோயிலிருந்து மீண்டு வரும் தேவையான அனைத்து உதவிகளையும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் மேற்கொள்ளும். நாடு வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்துள்ளது. அனைவரும் நம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும் நேரம் இது என்று சந்திரசேகரன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications