100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல்- ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு
டெல்லி: 100 வருடங்களில் இல்லாத அளவுக்கு பொருளாதார சிக்கல் நிலவுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்பது கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். இது உற்பத்தி, வேலை வாய்ப்பு துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகெங்கிலும் உள்ள வேல்யூ சங்கிலிகள், தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்களை முடக்கியுள்ளது.
நமது நிதி அமைப்பைப் பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வளர்க்கவும், ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த வருடம், பிப்ரவரி முதல், கொரோனா பாதிப்பு தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகளாக குறைத்தோம். அந்த நேரத்தில் வளர்ச்சியின் மந்தநிலையைச் சமாளிப்பதற்காக இது முக்கியமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை.
Recommended Video
நிதி அமைப்பில் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் வங்கிகளின் சிறப்புத்தன்மை ஆகியவற்றை பாதுகாக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒட்டுமொத்த வங்கி அமைப்பின் மொத்த செயல்படாத சொத்துக்கள் (NPA) மற்றும் நிகர NPA 2019-20ம் ஆண்டில் 8.3 சதவீதமாகவும், 2.2 சதவீதமாகவும் உள்ளன. முந்தைய மற்றும் 2018-19 ஆண்டில் மொத்த மற்றும் நிகர என்.பி.ஏக்களின் எண்ணிக்கை முறையே 9.1 மற்றும் 3.7 ஆக இருந்தது. என்.பி.ஏ கவரேஜ் விகிதமும் 2018-19ல் 60.5 சதவீதத்திலிருந்து 2019-20ல் 65.4 சதவீதமாக முன்னேறியுள்ளது.
ரிசர்வ் வங்கி வழங்கிய கூடுதல் ரூ .50,000 கோடியால் பணப்புழக்கத்துடன் வங்கிகள் உத்வேகம் அடைய வாய்ப்பு உள்ளது. வணிகங்களுக்கு குறிப்பாக SME க்கள் மற்றும் விவசாயத் துறைக்கு மிகவும் தேவையான நிதி உதவிக்கு இது உதவும் என்று நம்புகிறோம். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஒரு உத்வேகத்தை வழங்கும்.
2021 ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம் கணிப்புப்படி, இந்தியாவில் பொருளாதாரம் மீண்டு எழும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீத புள்ளிகளுக்கு அருகில் செல்ல வாய்ப்பு உள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா 7.4 சதவீதமாக வளர்ச்சியடைந்து, கூர்மையான திருப்புமுனையை பதிவுசெய்து, அதன் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த கடினமான காலங்களில் வங்கி முறைக்கு உதவுவதற்காக குறைந்த பண இருப்பு விகிதம், குறைந்த பணப்புழக்க விகிதங்கள் உள்ளிட்ட பல தளர்வுகளை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.
-
விலைவாசி தாறுமாறாக உயரப்போகுது.. ரிசர்வ் வங்கியே சொல்லிவிட்டது.. அப்போ நாட்டின் ஜிடிபி நிலைமை என்ன? -
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை.. 5.25% தொடரும்.. வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்! -
RN ரவி மகளின் அடடே விளக்கம்.. டாலருக்கு எதிராக 100ஐ தொட்ட ரூபாயின் மதிப்பு! வெறும் நம்பர்தானாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications