மத்திய அரசு vs ஆர்பிஐ.. மிகப்பெரிய பிரச்சனைக்கு காரணமான செக்சன் 7.. வெளிவரும் உண்மைகள்!
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே செல்கிறது. இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

ப.சிதம்பரம் என்ன சொன்னார்
ஆர்பிஐக்கும் மத்திய அரசுக்கு தொடர்ந்து நிலவி வரும் பிரச்சனைகளை கவனமாக கருத்தில் கொண்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மிக முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்தார். அதன்படி மத்திய அரசு எப்போதும் ஆர்பிஐ விதியான செக்சன் 7ஐ பயன்படுத்த கூடாது. ஆனால் தற்போதைய மத்திய அரசு அதை பயன்படுத்துகிறது. இது மிகப்பெரிய குற்றம் என்று கூறினார்.

அப்படி என்றால்
இவர் செக்சன் 7 என்று கூறிய பின்தான் அப்படி ஒரு விதி ஆர்பிஐ மீது திணிக்கப்பட்டு இருப்பதே பலருக்கு தெரியும். அதன்பின்தான் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இடையில் நடக்கும் மோதலுக்கு மத்திய அரசு பயன்படுத்திய செக்சன் 7 விதிதான் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ விதியின் படி செக்சன் 7 என்பது மத்திய அரசுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க கூடியது. ஆர்பிஐ சுதந்திரமாக இயங்கும் அமைப்பு ஆகும். ஆனால் செக்சன் 7ஐ பயன்படுத்தி மத்திய அரசு ஆர்பிஐக்கு உத்தரவுகளை பிறப்பிக்கலாம். அப்படி பிறப்பிக்கும்பட்சத்தில் ஆர்பிஐ அதை பின்பற்ற வேண்டும்.

இதற்கு முன் பயன்படுத்தியது இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இதற்கு முன் எந்த அரசும் இந்த விதியை பயன்படுத்தியது இல்லை. 1991ல் நடந்த எமெர்ஜென்சி, 2008 வந்த பொருளாதார பிரச்சனை என எதிலும் மத்திய அரசு இந்த விதியை பயன்படுத்தி ஆர்பிஐ அமைப்பை கட்டுப்படுத்தவில்லை. அப்போதெல்லாம் ஆர்பிஐ சுதந்திரமாகவே இயங்கியது.

இப்போது பயன்படுத்துகிறது
ஆனால் தற்போது ஆர்பிஐ அதிகமாக கடன் கொடுக்கிறது என்று கூறி அந்த விதியை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக ஆர்பிஐ அமைப்பிற்கு மத்திய அரசு இந்த விதிகள் மூலம் நிறைய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தற்போது ஆர்பிஐ மற்றும் மத்திய அரசுக்கு இடையில் நிலவும் பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications