கொரோனா தடுப்பூசி.. 18+ கவனத்திற்கு.. ஏப்.28 முதல்.. ஆன்லைனில் 'ரெஜிஸ்டர்' செய்வது எப்படி?
டெல்லி: கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், வரும் 28-ம் தேதி முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் ஜனவரி மாதம் முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 2-வது கட்டமாக 60 வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

கொரோனா 2-வது அலை தாக்கம் காரணமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற 1-ம் தேதி முதல் தடுப்பூசி போட மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக வருகிற ஏப்ரல் 28 முதல் கோவின் இணைய தளம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்காக CoWin இணையதளத்தில் எப்படி ரெஜிஸ்டர் செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
- cowin.gov.in தளத்தை Log on செய்து உங்கள் மொபைல் எண்ணை பதிவிடவும்
- உங்கள் மொபைலுக்கு OTP எண் அனுப்பப்படும்.
- அந்த OTP எண்ணை பதிவு செய்து 'Verify' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- OTP எண் சரிபார்க்கப்பட்டு பிறகு, தடுப்பூசி ரெஜிஸ்டர் பக்கம் ஓபன் ஆகும்
- அதில் photo ID proof உட்பட கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.
- பிறகு, கீழ் வலதுபுறத்தில் உள்ள Register பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- Register முடிந்ததும், உங்களுக்கு கணக்கு விவரங்கள் காண்பிக்கப்படும். அந்த கணக்கு விவரங்கள் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நேரத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
- நீங்கள் இன்னும் சிலரை சேர்க்க விரும்பினால், கீழே வலது பக்கத்தில் Add More பட்டனை க்ளிக் செய்து அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications