ரிசர்வ் வங்கி நிதி கொள்கைக் குழு கூட்டம்! ரெப்போ விகிதம் உயர வாய்ப்பு? நிபுணர்கள் கருத்து என்ன?
டெல்லி : மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், ரெப்போ விகிதங்களை 40 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மற்றும் பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் குழுவின் மூன்று நாள் கூட்டம் ஜூன் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கைக் குழு அறிக்கையை வெளியிட உள்ள நிலையில், பொருளாதார நிபுணர்கள், வாங்கியாளர் தொடங்கி வாடிக்கையாளர்கள் வரை அனைவரின் பார்வையும் அதன் மீதே உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கியின் மூன்று நாள் கூட்டத்தின் போது இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை மீண்டும் உயர்த்தலாம் என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில், ஆஃப்-சைக்கிள் கொள்கை மறுஆய்வில், RBI அதன் ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. மே 4 அன்று 4.40% ஆக உள்ள நிலையில், பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணவீக்கம் உயர்வு
பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 7.79% என இருக்கும் நிலையில், இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக உள்ளது. மறுபுறம், மொத்த விற்பனை பணவீக்கம் அதே மாதத்தில் 15.1% என்ற சாதனை அளவை எட்டியது. எனவே, சாதாரண குடிமக்களுக்கு விலை ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி முக்கிய கவனம் செலுத்துகிறது. கச்சா எண்ணெய் விலை மற்றும் எல்பிஜி விலையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசு நடவடிக்கை
மத்திய அரசு சமீபத்தில் எரிபொருள் விலையை குறைத்த நிலையிலும், சில எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தியது, கோக்கிங் நிலக்கரிக்கான சுங்க வரியை குறைத்தது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இருப்பினும், இந்த குறுகிய காலத்திற்குள் ரிசர்வ் வங்கி மற்றொரு வட்டி விகித உயர்வைத் அறிவிக்காது என்றும் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜிடிபி வளர்ச்சி
2022 நிதியாண்டில் நாடு 8.7% ஜிடிபி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது ஒரு நம்பிக்கையான காரணியாக இருந்தாலும், அதன் 2022ஆம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி மூன்றாம் காலாண்டை விட சற்றே குறைந்துள்ளது. இதன் காரணமாக ஆய்வாளர்கள் ரெப்போ தொடர்பால கலவையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications