பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் இருக்குமா? பவார் உறவினர் 'பொளேர்'
டெல்லி: பால்தாக்கரே உயிரோடு இருந்திருந்தால் பாஜகவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினரும் கார்ஜத் ஜாம்கெத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான ரோஹித் ராஜேந்திர பவார்
கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி அமைத்தது. இதில் பாஜக 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படுகிறது. இதை எந்த ஒரு கட்சியும் தனித்து பெறவில்லை. இதனால் பாஜக-சிவசேனா ஏற்கெனவே கூட்டணி அமைத்ததாலும் இருவரது எண்ணிக்கையும் பெரும்பான்மையை தாண்டுவதாலும் அவை ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சிவசேனா கோரிக்கை
ஆனால் முதலில் இரண்டரை ஆண்டுகள் நாங்கள் முதல்வராகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாஜக முதல்வராகவும் இருக்க வேண்டும் என கூட்டணி முன்னர் பேசியபடி ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சிவசேனா கோரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனா
ஆனால் பாஜகவோ அது போன்ற வாக்குறுதி ஏதும் அளிக்கப்படவில்லை என கூறுகிறது. இந்த இரு கட்சிகளின் மோதல்களால் மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

பால்தாக்கரே
இந்த நிலையில் இந்த மோதல் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் உறவினரும் கார்ஜத் ஜாம்கெத் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வென்றவருமான ரோஹித் ராஜேந்திர பவார்
தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் மகாராஷ்டிரத்தில் பல தலைவர்கள் மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளனர். அத்தகைய தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பால்தாக்கரே.

பாஜக
அவரை நான் மதிப்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முக்கியமானது தேசிய அரசியலில் அவர் உயரம் தொட்டதுதான். தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் சரி சம பங்கு என சிவசேனாவுக்கு பாஜக வாக்குறுதி அளித்துவிட்டது. ஆனால் இப்போது தனது வாக்குக்கு எதிராக பாஜக நடக்கிறது.

அச்சம்
இதை பார்க்கும் போது பால்தாக்கரே தற்போது உயிரோடு இருந்திருந்தால் பாஜக இதுபோல் தைரியமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய மோதல்களை பார்க்கும் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- சிவசேனா கூட்டணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா என்ற அச்சம் எழுகிறது என்றார் ரோஹித்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications