ரூ.10 போல் ரூ.20 நாணயம்.. விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!
Recommended Video
டெல்லி: 20 ரூபாய் நாணயங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் மத்திய பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 5 ரூபாய், 10 ரூபாயை போல் 20 ரூபாய் நாணயம் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

விரைவில் வரும்
கடந்த மார்ச் 7ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த நாணயங்களை அறிமுகம் செய்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நாணயங்கள் விரைவில், பொது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

செல்லாத 10 ரூபாய் நாணயம்
ஏற்கனவே வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயமே தொங்கலில் உள்ளது.பேருந்துகளில் டிக்கெட் பெற, கடைகளில் பொருட்கள் வாங்க, நடை பாதை வியாபாரிகள் என யாரிடம் கொடுத்தாலும் 10 நாணயங்கள் செல்லாது, வேண்டாம் நோட்டாய் கொடுங்கள் என வாக்குவாதம் செய்து வந்தனர்.

மக்கள் தயக்கம்
10 ரூபாய் நாணயங்கள் செல்லும் தைரியமாக வாங்கலாம் என ஆர்பிஐ அறிக்கை விட்ட பின்னரும் தீராமல் இருந்தது இந்த 10 ரூபாய் நாணயத்தின் பஞ்சாயத்து தீராமல் இருந்தது. இன்றும் பல நகரங்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

என்ன பஞ்சாயத்து வரப்போகுதோ?
இந்நிலையில் 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது என்னென்ன பஞ்சாயத்தை கூட்டப்போகிறதோ என இப்போதே யோசிக்க தொடங்கிவிட்டனர் மக்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications