அடேங்கப்பா ஆச்சரியம்.. ஆர்எஸ்எஸ்-ஓவைசி "இணைந்து" வரவேற்கும் ஒரே விஷயம்
டெல்லி: ஓரின சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதனை எதிர்க்கிற மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசியும் ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஓரின சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்துக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3:2 என்ற அடிப்படையில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இறுதியாக, ஓரினச் சேர்க்கை உறவாளர்கள் ஒரே வீட்டில் தங்கலாம்; அவர்கள் மீது அரசு தரப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது; ஆனால் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கான அங்கீகாரம் குறித்து நாடாளுமன்றம்தான் திருமண சட்ட திருத்தம் மூலம் முடிவு செய்ய வேண்டும் என்கிற இறுதித் தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ்: இதனிடையே சித்தாந்த ரீதியாக எதிரும் புதிருமாக இருக்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசியும் இந்த தீர்ப்பு தொடர்பாக ஒரே மாதிரியான கருத்துகளை தெரிவித்திருப்பது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் சுனில் அம்பேகர் தமது எக்ஸ் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பானது இது தொடர்பாக ஆழ்ந்து விவாதித்து உரிய முடிவுகளை மேற்கொள்ளலாம் என்றார்.

விஸ்வ ஹிந்து பரிஷத்: விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அதில், ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் தர மறுத்தது வரவேற்புக்குரியது; இது ஒன்றும் அடிப்படை உரிமையும் அல்ல. ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் பதிவுக்குரியதும் அல்ல என விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஓவைசியின் கருத்து: மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஓவைசி தமது எக்ஸ் பக்கத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேதான் திருமணம் நடைபெற வேண்டும். ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு அங்கீகாரம் தர மறுத்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது. இதில் பாகுபாடு எங்கே வருகிறது என தெரியவில்லை? என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் தனிநபர் சட்டங்கள் உள்ளிட்டவற்றின் கீழ் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது ஏற்க முடியாதது; ஆணுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான திருமணத்தை இஸ்லாத் ஏற்கவில்லை எனவும் ஓவைசி சுட்டிக்காட்டியுள்ளார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications